Ad

ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் மனைவிக்கு பாலியல் டார்ச்சர் - அ.ம.மு.க நிர்வாகி கொடூரக் கொலை

திருச்சி அ.ம.மு.க பிரமுகர் கொலை வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி குளித்தலை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், கோபமான அந்த பெண்ணின் கணவர், நண்பர்களை சேர்த்துக் கொண்டு, அ.ம.மு.க நிர்வாகியை கொலை செய்தது தெரிய வந்திருக்கிறது.

குளித்தலை

திருச்சி மாவட்டம், நெடுங்கூர் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் பகுதியில் வசித்து வந்தவர், பாண்டிச்செல்வம் வயது 45. இவர், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைப் பூர்வீகமாகக் கொண்டவர். பாண்டிசெல்வம் சாலை அமைக்க பயன்படுத்தப்படும், தார் சம்பந்தப்பட்ட மூலப்பொருளை மொத்தமாக வாங்கி, ஒப்பந்ததாரர்களுக்கு விற்பனை செய்யும் தொழிலை மேற்கொண்டு வந்துள்ளார். அதோடு, அவர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின், வர்த்தக அணி செயலாளராகவும் இருந்தார்.

கடந்த ஏப்ரல் 14 - ம் தேதி, பாண்டிச்செல்வம் அவரது வீட்டின் பின்புறம் குளியலறையில் ஆணுறுப்பு அறுக்கப்பட்டு நிர்வாண நிலையில் கழுத்தில் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதுகுறித்து, சிறுகனூர் காவல் நிலைய போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அவர்களது விசாரணையில், கொலை செய்யப்பட்ட பாண்டிச்செல்வத்தின் வீட்டின் எதிர்புறம் சங்கீதா ( 23) என்ற பெண் வசித்து வந்திருக்கிறார். லாரி ஓட்டுநரான அவரது கணவர் பொன்னம்பலம் (30) பணி நிமித்தமாக வெளியூர் செல்லும்போதெல்லாம், சங்கீதாவும் அவரது தாய் வீடான பெரம்பலூர் மாவட்டம், ஆயக்குடி கிராமத்துகு சென்று வருவதை வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார்.

Also Read: சென்னை:`காரில் நடந்த கொடுமை; வீடியோ எடுத்து மிரட்டல்!’ -துணை இயக்குநர் மீது சின்னத்திரை நடிகை புகார்

`தான் வீட்டில் இல்லாதபோது ஏன், ஊருக்குச் செல்கிறாய்' பொன்னம்பலம், தனது மனைவி சங்கீதாவிடம் விசாரித்தபோது தான் விஷயம் தெரிய வந்திருக்கிறது. வீட்டில் பொன்னம்பலம் இல்லாத சமயத்தில் எதிர்வீட்டு அ.ம.மு.க பிரமுகர் பாண்டிச்செல்வம், வீட்டுக்குள் வந்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி அழுதிருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த பொன்னம்பலம், தனது உறவினரான நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியைச் சேர்ந்த பசுவராஜ் ( 30), அவரது தம்பி தர்மேஷ் (27) ஆகிய மூவரும் சேர்ந்து பாண்டிச்செல்வத்தை கொலை செய்ய திட்டமிட்டனர்.

அதன்படி, கடந்த ஏப்ரல் 14 - ம் தேதி வீட்டினுள் சென்று, உறங்கிக்கொண்டிருந்த பாண்டிசெல்வத்தின் மர்ம உறுப்பை அறுத்ததோடு, ஆத்திரத்தில் கழுத்தில் குத்தியும் அவரை கொலை செய்துள்ளனர். போலீஸ் விசாரணையில் இதனை ஒப்புக்கொண்ட பொன்னம்பலம், அவரது உறவினர் பசுவராஜ், சங்கீதா உள்பட மூவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தேடப்பட்டு வந்த பசுவராஜின் தம்பி தர்மேஷ் கரூர் மாவட்டம், குளித்தலை குற்றவியல் நீதிமன்ற எண் 1-ல் சரணடைந்தார். இதனையடுத்து, நீதிபதி தர்மேஷை 15 நாள்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.



source https://www.vikatan.com/news/crime/trichy-man-murdered-by-neghbour-for-sexually-torturing-his-wife

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக