Ad

வியாழன், 8 ஏப்ரல், 2021

குமரி: நெருங்கிப் பழகிய மாணவியின் தோழியுடன் ஓட்டம்! - போக்சோ வழக்கு.. இளைஞரை தேடும் காவல்துறை

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருக்கிறார். அதில், `திங்கள் சந்தையை அடுத்த பாதிரிகோடு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் மதன்(27) என்பவர் 2015 முதல் தன்னை காதலித்ததாகவும், அப்போது பிளஸ் 2 படித்துக்கொண்டிருந்த தன்னை 3.4.2015 அன்று மதன் நெருங்கிப் பழகியதுடன், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சிறார் வதை செய்ததாகவும்’ அந்த புகாரில் கூறியிருக்கிறார். மேலும், திருமண ஆசைகாட்டி 11.08.2016 மற்றும் 20.02.2021 ஆகிய தேதிகளிலும் மதன் நெருக்கமாக இருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். இது குறித்து குளச்சல் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மதனை தேடி வருகின்றனர்.

போக்ஸோ வழக்கு பதியப்பட்டுள்ள மதன்

பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் பேசினோம், ``திருமணம் செய்துகொள்வதாக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் மாணவியிடம் பழகியிருக்கிறான் மதன். மாணவியின் பெற்றோர் காலையில் வேலைக்கு சென்ற பிறகு மதன் அவர்களின் வீட்டுக்குச் செல்லுவதை வாடிக்கையாக வைத்திருந்தான். மாணவியை திருமணம் செய்ய உள்ளதாக உறவினர்களிடம் கூறிவந்துள்ளான். இந்த நிலையில் மாணவியின் மொபைலில் இருந்து அவரது தோழி ஒருவரின் போன் நம்பரை எடுத்துள்ளான் மதன். பின்னர் அந்த பெண்ணிடம் போனில் பேசி பழக்கமாகியுள்ளான்.

திங்கள்சந்தை பகுதியைச் சேர்ந்த அந்த தோழிப் பெண்ணை காதலிக்கத்தொடங்கிய மதன், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அந்த பெண்ணுடன் வீட்டைவிட்டு வெளியேறினான். அந்த பெண்ணின் பெற்றோர் மகளை தேடிபிடித்து வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். அதன்பிறகு பாதிக்கப்பட்ட மாணவி தன்னை காதலித்தது குறித்தும், திருமணம் செய்துகொள்ளுமாறும் கேட்டிருக்கிறார். ஆனால் மதன் மாணவியை திருமணம் செய்ய விருப்பம் இல்லை எனத் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து மதனின் பெற்றோரிடம் பேசிப்பார்த்தும் நியாயம் கிடைக்கவில்லை.

குளச்ச அனைத்து மகளிர் காவல் நிலையம்

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை திங்கள் சந்தையைச் சேர்ந்த பெண்ணுடன் மீண்டும் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார் மதன். அவனது போனில் தொடர்புகொள்ள முடியவில்லை. அவனுக்கு மேலும் சில பெண்களுடன் தொடர்பு இருப்பதாக இப்போது எங்களுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. எனவே இந்தப் பெண்ணுக்கு நியாயம் கேட்டு போலீஸில் புகார் அளித்தோம்" என்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் பேசினோம், "மதனின் தந்தை கிருஷ்ணன் ஒரு அரசியல் கட்சியில் கன்னியாகுமரி கோட்ட அமைப்புச் செயலாளராக இருக்கிறார். மதன் மீது வழக்குப்பதிவு செய்து அவனை தேடி வருகிறோம். அவனை கைது செய்த பிறகுதான் வேறு பெண்களுடன் தொடர்பு இருக்கிறதா இல்லையா என தெரியவரும்” என்றனர்.



source https://www.vikatan.com/social-affairs/crime/police-searching-young-man-in-sexual-harassment-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக