Ad

வியாழன், 8 ஏப்ரல், 2021

ஈஸ்டர் தாக்குதல்: 11 இஸ்லாமிய அமைப்புகள் தடைக்கு அனுமதி! - சர்ச்சையான இலங்கை அரசின் உத்தரவு

ஜனாதிபதி ஆணைக்குழு விசாரனை:

இந்த தாக்குதல் தொடர்பாக விசாரனை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட "ஜனாதிபதி ஆணைக்குழு" பயங்கரவாத அமைப்புகள் என குறிப்பிட்டு சிங்கள இனவாத அமைப்புகள், சர்வதேச மற்றும் உள்நாட்டு இஸ்லாமிய அமைப்புகள் அடங்கிய பட்டியலை அரசிடம் சமர்பித்து, தடைசெய்ய பரிந்துரை செய்தது.

இந்நிலையில், இலங்கை அரசின் தலைமைச் சட்ட அதிகாரி தப்புல டி லிவேரா (Dappula de Livera) ஆணைக்குழுவின் பரிந்துரைப்படி, 11 அமைப்புகளை தடை செய்வதற்கான அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளதாக, அரச வழக்கறிஞர் நிஷா ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

கோத்தபய ராஜபக்‌சே

தடைசெய்யப்பட்ட அமைப்புகள்:

ஐ.எஸ்.ஐ.எஸ்(ISIS), அல்-கொய்தா(Al Qaeda) உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுடன் ஐக்கிய தவ்ஹீத் ஜமாத், சிலோன் தவ்ஹீத் ஜமாத், ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத், அனைத்து இலங்கை தவ்ஹீத் ஜமாத், ஜம்யதுல் அன்சாரி சுன்னதுல் மொஹொமதியா, தாருல் அதர் எட் ஜம் உப் ஆதர், ஶ்ரீலங்கா இஸ்லாமிய மாணவ சங்கம், சேவ் த பர்ல்ஸ் மற்றும் சுபர் முஸ்லிம் என 11 இஸ்லாமிய அமைப்புகள் மட்டும் தடைசெய்ய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்த ஒரு சிங்கள இனவாத அமைப்புகளும் இடம் பெறாமல், 11 அமைப்புகளும் இஸ்லாமிய அமைப்புகளாகவே இருப்பது அந்நாட்டு அரசியலில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தடைசெய்யப்பட்டது குறித்து அமைப்புகளின் விளக்கம்:

சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பயங்கரவாதத்திற்கு எதிராகவும், தீவிரவாதத்தை அடியோடு இல்லாது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலும் செயற்படும் ஜனநாயக ரீதியான தமது அமைப்பை தடை செய்வதானது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று” என தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. மேலும், “பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய அமைப்புகளை தடை செய்வதற்கு தாம் ஆட்சேபனை கிடையாது. ஆனால் பயங்கரவாதத்திற்கு எதிராக செயற்படும் ஓர் அமைப்பை தடை செய்வதானது, ஜனநாயகத்திற்கு விரோதமானது. அரசாங்கத்தின் இந்த தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றத்துக்கு சென்று நியாயம் கேட்க உள்ளோம்” என அந்த அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முஜுபூர் ரஹ்மான்

இதுகுறித்து, இலங்கையின் முக்கிய எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹ்மான் BBC ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “இனவாத கொள்கைகளை கொண்ட பெரும்பான்மை சிங்கள அமைப்புக்களும் இந்த பட்டியலில் காணப்பட்ட போதிலும், அந்த இனவாத அமைப்புகளை தடை செய்யாது, இஸ்லாமிய அமைப்புகளை மாத்திரம் தடை செய்வதானது ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார். மேலும், “இந்த நாட்டிலுள்ள சட்டம் சிறுபான்மை சமூகத்திற்கு ஒரு விதமாகவும், பெரும்பான்மை மக்களுக்கு வேறொரு விதமாகவும் செயற்படுகின்றது என்பது இதனூடாக உறுதிப்படுத்தப்படுகின்றது” எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/11-islamic-organizations-banned-in-sri-lanka

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக