Ad

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

`ஒரே நாளில் 83,347 பேருக்கு தொற்று; 45 லட்சத்தைக் கடந்த குணமடைந்தோர் எண்ணிக்கை!’ - இந்தியாவில் கொரோனா #NowAtVikatan

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 83,347 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது 56,46,011-ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,085 மரணங்கள் கொரோனா காரணமாக நிகழ்ந்துள்ளன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் பலி எண்ணிக்கை 90,020 -ஆக அதிகரித்திருக்கிறது. இதுவரை 45,87,614 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள்.

கொரோனா

இந்தியாவில் தற்போது வரை 6,62,79,462 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 9,53,683 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/23-09-2020-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக