மேலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!
டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் வங்க கடலில் மேலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தமிழகம் நோக்கி நகரும் என தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், அது வலுபெறுவதற்கான வாய்ப்பு குறைவு எனவும் தெரிவித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!
அந்தமானில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா ஒடிஷா நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த நபருக்கு கொரோனா!
சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சிங்கப்பூரில் ஒமிக்ரான் வகை தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த தஞ்சை சேர்ந்த நபருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதா என பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. இது தொடர்பாக பேசிய திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, ``சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த நபருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அது ஒமிக்ரான் வகை வைரஸா என்பது ஆய்வுக்குப் பின்னரே தெரியவரும்” என தெரிவித்திருக்கிறார்.
source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-03-12-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக