Ad

வியாழன், 4 பிப்ரவரி, 2021

விவசாயிகள் போராட்டம்: ரிஹானா முதல் சித்தார்த் வரை.. ட்விட்டர் கருத்து மோதல்! - இதுவரை நடந்தது என்ன?

“உங்கள் ஹீரோக்களை புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுங்கள்” என நடிகர் சித்தார்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

விவசாயிகள் போராட்டத்திற்கு வெளிநாட்டுப் பிரபலங்கள் தெரிவித்த கருத்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்த கருத்து தொடர்பாக அவர் இவ்வாறாகப் பதிவிட்டு உள்ளார்.

விவசாயிகள் தொடர்பான பிரச்னை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் எனப் பாலிவுட், கிரிக்கெட் பிரபலங்கள் ட்வீட் செய்திருந்தனர்.

இர்பான் பதான்

இந்த நிலையில் இர்பான் பதான், அமெரிக்காவில் ஆப்ரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் காவல்துறை அதிகாரியால் கொலை செய்யப்பட்ட போது, இந்தியா உரிய நேரத்தில் தனது வருத்தத்தைத் தெரிவித்தது. #JustSaying என்று நேற்று ட்வீட் செய்திருந்தார்.

ட்விட்டரில் ஆதரவும், எதிர்ப்பும்...!

இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாக மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடிவருகின்றனர்.

மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டம் இரண்டு மாதங்களைக் கடந்துவிட்டது.

குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, விவசாயிகள் போராட்டம் நடக்கும் பகுதிகளில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

ரிஹானா

இந்தச் சூழலில், பாப் பாடகி ரிஹானா இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அவர் பகிர்ந்திருந்த ட்விட்டர் பதிவில், ``ஏன் இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை?' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

ரிஹானா 100 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களைக் கொண்ட பிரபலம் என்பதால், சில மணி நேரங்களில் அந்த ட்வீட் சர்வதேச கவனத்தை ஈர்த்தது.

அவரை அடுத்து சூழலியல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க், நடிகை மியா கலிஃபா உள்ளிட்டோர் விவசாயிகள் குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர்.

வழக்கும் ட்வீட்டும்...!

அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸின் சகோதரி மகள் மீனா ஹாரிஸும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாகக் கருத்துகளைப் பகிர்ந்திருந்தார்.

கிரேட்டா தன்பெர்க் மீது டெல்லி காவல் துறை வழக்குப் பதிந்துள்ளதாக முதலில் ஒரு செய்தி பரவியது. ஆனால், இதனை டெல்லி காவல்துறை மறுத்துவிட்டது.

கிரெட்டா தன்பெர்க்

இந்த சூழலில் கிரேட்ட் மீண்டும் ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில், ``விவசாயிகளின் அமைதி வழி போராட்டத்தை இப்போதும் ஆதரிக்கிறேன். வெறுப்பு விமர்சனம், மிரட்டல்கள், மனித உரிமை மீறல்கள் எதனையும் மாற்றிவிடாது” எனக் குறிப்பிட்டு இருந்தார்.

டாப்ஸி கருத்து!

டாப்ஸி

எதிர்ப்பு...!

இந்தியாவில் சச்சின், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ஷிகார் தவான் அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன், கங்கனா ரணாவத், பிடி.உஷா உள்ளிட்ட விளையாட்டு மற்றும் பாலிவுட் பிரபலங்கள் IndiaTogether என்ற ஹேஷ்டேகில், ட்விட்டரில் தங்களது கருத்துகளைப் பகிர்ந்தனர்.

அதில் இந்தியாவின் பிரச்னையை நாங்களே சரி செய்து கொள்கிறோம். வெளிநாட்டினர் யாரும் தலையிட வேண்டாம் என்ற தொனியில் கருத்து தெரிவித்து இருந்தனர்.

சச்சின் பகிர்ந்திருந்த ட்விட்டில், “இந்தியாவின் இறையாண்மையில் சமரசம் செய்துகொள்ள முடியாது. வெளிநாட்டினர் பார்வையாளர்களாக இருக்கலாம். ஆனால், பங்கேற்பாளர்களாக இருக்கக் கூடாது. இந்தியாவைப் பற்றி இந்தியர்களுக்குத் தெரியும். அவர்கள் இந்தியாவுக்கு என்ன வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள்" எனப் பதிவிட்டிருந்தார்.

சித்தார்த், இர்பான் பதான்!

இந்த நிலையில்தான் ட்விட்டரில் நடிகர் சித்தார்த்தும், கிரிக்கெட்டர் இர்பான் பதானும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சித்தார்த்

“உங்கள் ஹீரோக்களை புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுங்கள் அல்லது அவர்கள் விழுவதைப் பாருங்கள். கல்வி, இரக்கம், நேர்மை ஆகியவை ஒரு நாளைக் காப்பாற்றியிருக்கலாம். அதிகாரத்தில் உள்ளவர்கள் எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் மற்றவர்களுடன் பப்பட் ஷோவிலுள்ள பொம்மைகளைப்போல் ஒன்றுகூடி ஒரேமாதிரி ஊதுகிறார்கள். அப்படித்தான், இந்த பிரசாரமும்” என்று கருத்திட்டுள்ளார்.

வெளிநாட்டு சக்திகள்

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த விவகாரத்தில் சர்வதேச சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க் பெயரை முதல் தகவல் அறிக்கையில் டெல்லி காவல்துறை சேர்த்ததாக வெளியான தகவலால் டெல்லி நகர காவல்துறை சமூக ஊடகங்களில் கடுமையாகக் கேலிக்கும், விமர்சனத்திற்கும் உள்ளானது.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் எவருடைய பெயரையும் குறிப்பிடாமல் டெல்லி நகர காவல்துறையின் சைபர் பிரிவு வழக்குப் பதிவு செய்திருப்பதாகச் சிறப்பு ஆணையர் பிரவீர் ரஞ்சன் செய்தியாளர்களிடம் தெளிவுபடுத்தினார்.

சமீப காலமாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஒரு ஆவணம் பகிரப்பட்டு வருகிறது. அதில் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கும் வழிமுறைகள் ஊக்குவிக்கப்படும் வகையில் இருப்பதால் அதன் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் உள்ளனவா என்பது குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாக பிரவீர் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

அமித் ஷா, அஜித் தோவல் ஆலோசனை

இந்த நிலையில், இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் நேற்று (வியாழக்கிழமை) மாலை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. அஜித் தோவால் அமித் ஷாவை சந்தித்த அதே சமயம், டெல்லி நகர காவல்துறை ஆணையர் ஸ்ரீவாஸ்தவாவும் நாடாளுமன்றத்தில் உள்ள உள்துறை அமைச்சர் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டார் என்பது கூடுதல் தகவல்!



source https://www.vikatan.com/government-and-politics/protest/delhi-protest-and-twitter-fight-what-happened-till-4th-feb

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக