Ad

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

சூழலியல் ஆர்வலர் திஷா ரவி கைது குறித்து உங்கள் கருத்து என்ன? #VikatanPoll

விவசாயிகள் போராட்டம் குறித்து சர்வதேச பிரபலங்கள் பாடகி ரியான்னா, சூழலியல் போராளி கிரேட்டா தன்பர்க் ஆகியோர் ட்வீட் செய்தது பல்வேறு சலசலப்புகளைக் கிளப்பியது. இதனிடையே கிரேட்டா தன்பர்க் பதிவு செய்த ஒரு ட்வீட்டில் 'டூல் கிட்' என்றொரு டாக்குமென்ட்டை ஷேர் செய்திருந்தார். அது வன்முறையையும் பிரிவினையையும் தூண்டும் வகையில் இருந்ததாகக் கூறி, டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. சம்பந்தப்பட்ட அந்த டூல் கிட்டைத் தயாரித்தவரைத் தேடிவந்தது. தற்போது, 22 வயதான சூழலியல் ஆர்வலர் திஷா ரவி இது தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்தான் அந்தச் சர்ச்சைக்குரிய டூல் கிட்டை ஷேர் செய்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...


source https://www.vikatan.com/government-and-politics/controversy/vikatan-poll-regarding-the-arrest-of-activist-disha-ravi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக