முதலிடத்தில் மதுரை மண்டலம்!
தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் மதுபான கடைகளில் வழக்கமான விற்பனையைவிட பன்மடங்கு விற்பனை அதிகரிப்பது தொடர்கதையாகிவருகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நாள்களான வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில் மட்டும் ரூ.466 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. மதுரை மண்டலத்தில் அதிகபட்சமாக ரூ103.82 கோடிக்கு மது விற்பனையானது. இரண்டாவது இடமாக திருச்சி மண்டலத்திலும், மூன்றாவது இடமாக சென்னை மண்டலத்திலும் அதிக அளவில் மது விற்பனை நடந்திருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.
source https://www.vikatan.com/news/general-news/15-11-2020-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக