Ad

செவ்வாய், 20 அக்டோபர், 2020

`மார்பிங் போட்டோ; பணம் கேட்டு மிரட்டல்!’ -பேஸ்புக் நண்பரால் அதிர்ச்சியடைந்த நர்ஸ்

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தை அடுத்துள்ள பி.கே.புரம் மகாதேவமலை கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சரத்குமார் (21), டிராக்டர் ஓட்டுநர். இவருக்கு, குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஓராண்டுக்கு முன் பேஸ்புக் மூலம் அறிமுகமாகியிருக்கிறார். அந்தப் பெண் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரிந்துவருகிறார்.

பேஸ்புக்

பக்கத்து ஊர்க்காரர் என்பதால் சரத்குமாரின் பேச்சை நம்பி தன்னுடைய வாட்ஸ்அப் நம்பரையும் பகிர்ந்துள்ளார் அந்த நர்ஸ். இந்த நிலையில், ஹைதராபாத்திலிருந்து தன்னுடைய சொந்த கிராமத்துக்கு நர்ஸ் வந்துள்ளதைத் தெரிந்துகொண்ட சரத்குமார், வாட்ஸ்அப்பில் ஆபாசமான பதிவுகளைப் பதிவிட்டு உல்லாசமாக இருக்க அழைத்ததாகவும் கூறப்படுகிறது.

Also Read: `கணவருக்கு மொட்டைக் கடிதம்; மார்பிங் போட்டோக்கள்!' இளம்பெண் விவகாரத்தில் சிக்கிய அரசு மருத்துவர்

அதிர்ச்சியடைந்த அந்த நர்ஸ், சரத்குமாரை கண்டித்துவிட்டு பேச மறுத்துள்ளார். ஆத்திரமடைந்த சரத்குமார், நர்ஸின் போட்டோவை பேஸ்புக்கில் இருந்து எடுத்து அவரது முகத்தை ஆபாசமாக மார்பிங் செய்து நர்ஸுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியிருக்கிறார்.

சரத்குமார்

`இந்த போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றாமல் இருக்க இரண்டு லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும்’ என்று சரத்குமார் மிரட்டியதாகவும் சொல்கிறார்கள். இதனால், பயந்துபோன அந்த நர்ஸ், தன் பெற்றோரிடம் நடந்ததைக்கூறி அழுதுள்ளார். திடுக்கிட்ட பெற்றோர், உடனடியாக குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து சரத்குமாரை கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.



source https://www.vikatan.com/social-affairs/crime/vellore-police-arrests-youth-over-harassment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக