நீட்டிக்கப்படுமா முழு ஊரடங்கு..?
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மிக அதிக அளவில் இருந்து வருகிறது. தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இந்த மாதம் 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தியது ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு. எனினும் அதில் சில தளர்வுகள் இருந்தது. தொடர்ந்து மக்கள் ஊரடங்கினை சரியாக பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் முழு ஊரடங்கினை 31-ஆம் தேதி வரை நீட்டித்து தளர்வுகளற்ற முழு ஊரடங்காக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழகத்தில் அமலில் இருந்துவரும் நிலையில் இந்த முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார். இதில் மருத்துவம், வருவாய் துறை, பொதுத்துறை மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் தமிழகத்தில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. இன்று அல்லது நாளை ஊரடங்கு நீட்டிக்கப்படுவது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
source https://www.vikatan.com/news/general-news/27-05-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக