Ad

வெள்ளி, 14 மே, 2021

சென்னை: பெண் ஊழியரிடம் செல்போன் பறிப்பு! - பொதுமக்களிடம் வசமாக சிக்கிய மூவர்

சென்னை தண்டையார்பேட்டை பரமேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரின் மனைவி ராஜேஸ்வரி (34). இவர் தனியார் மருத்துவமனையில் வேலைப்பார்த்து வருகிறார். 12-ம் தேதி இரவு பணி முடிந்து ராஜேஸ்வரி, வீட்டுக்கு மருத்துவமனை வாகனத்தில் சென்றார். பின்னர் அவர் வாகனத்திலிருந்து இறங்கி செல்போனில் பேசியப்படி தெருவில் நடந்துச் சென்றார்.

செல்போன்

அப்போது ஒரே பைக்கில் மூன்று பேர் வந்தனர். அவர்கள் ராஜேஸ்வரியின் செல்போனைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்றனர். அதனால் ராஜேஸ்வரி அதிர்ச்சியடைந்தார். பின்னர் சுதாரித்துக் கொண்ட அவர் `திருடன் திருடன்’ என சத்தம் போட்டார். ராஜேஸ்வரி சத்தம் கேட்டு அந்தப்பகுதியில் உள்ளவர்கள் செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றவர்களை மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆர்.கே.நகர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் செல்போனைப் பறித்த 3 பேரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் பிடிப்பட்டவர்கள் கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ் என்கிற பிரிஞ்சி சதீஷ் (24), கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ,நகரைச் சேர்ந்த அஜித் (23), 14 வயது சிறுவர் ஆகியோர் எனத் தெரியவந்தது.

கைது

இதையடுத்து அவர்களிடமிருந்து செல்போன், பைக் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சதீஷ், அஜித் மீது ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் அடிதடி வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் சிறுவன் மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளது.

செல்போனைப் பறித்து விட்டு தப்பிச் செல்ல முயன்ற மூன்று பேரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் தண்டையார்பேட்டையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read: சென்னை: அதிகாலையில் சைக்கிளிங் - நடிகர் கௌதம் கார்த்திக்கின் செல்போன் பறிப்பு



source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-3-youths-in-cellphone-snatching-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக