Ad

வியாழன், 13 மே, 2021

கொரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 4,000 பேர் உயிரிழப்பு..! - மத்திய சுகாதாரத்துறை #NowAtVikatan

இந்தியாவில் கொரோனா நிலவரம்..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 3,43,144 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,40,46,809 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,000. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,62,317-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,00,79,599-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 37,04,893 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 3,44,776 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 17,92,98,584 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.



source https://www.vikatan.com/news/general-news/14-05-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக