Ad

செவ்வாய், 17 நவம்பர், 2020

ஹர்ஷிதா சொன்ன `குட்டி ஸ்டோரி'... அபிக்கு மட்டுமா அதிர்ச்சி?! #VallamaiTharayo

அபியும் அனுவும் ஊர் சுற்றிவிட்டுத் திரும்போது மொபைல் ஒலிக்கிறது. குழந்தையிடமிருந்து மொபைலை வாங்கிப் பார்க்கும் அபி, அதிர்ச்சியடைகிறாள். சித்தார்த்திடமிருந்து நான்கு மிஸ்டு கால்கள். அப்போதுதான் அனு மற்றும் குழந்தைகளுடன் கடற்கரையில் தான் காட்சியளிக்கும் போட்டோ தன்னுடைய வாட்ஸ் அப் டிபியில் இருப்பதைக் கவனிக்கிறாள் அபி. அவளுடைய மகள்தான் இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறாள், அதைப் பார்த்துவிட்டுத்தான் சித்தார்த் கூப்பிட்டிருக்கிறான் என்று நினைத்துப் பதறுகிறாள். நல்லவேளை... அவன் இன்னும் டிபி பார்க்கவில்லை போல! சாதாரணமாகப் பேசிவிட்டு வைத்துவிடுகிறான்.

Vallamai Tharayo

`சித்தார்த்துக்கு நான் வந்தது தெரிந்தால் என்ன, தலையைச் சீவிடுவானா' என்று கேட்கிறாள் அனு. அபியின் கஷ்டம் அவளுக்கு. அனுவின் அசட்டுத் தைரியம் அவளுக்கு. குழப்பமான மனநிலையில் வீட்டுக்கு வருகிறார்கள். அப்போது அவர்களை பர்த்டே பார்ட்டிக்கு அழைத்துச் செல்கிறாள் ஹர்ஷிதா.

நிலைகொள்ளாமல் தவிக்கும் அபியைப் பார்த்த ஹர்ஷிதா, அனுவிடமும் அபியிடமும், `என்னைப் பற்றித் தெரிந்துகொள்ள நினைக்கிறீர்கள்... அப்படித்தானே?' என்று கேட்கிறாள். இருவரும் அமைதியாக அவளைப் பார்க்கிறார்கள்.

”கிராமத்தில் குடும்பம்தான் எல்லாம் என்று நினைத்து வாழும் அபிக்கு, நான் என் செக்ஸ் பார்ட்னருடன் பியர் சாப்பிட்டது அதிர்ச்சியாகத்தான் இருக்கும்” என்ற ஹர்ஷிதா தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறாள்.

பெற்றோர் இல்லாமல் உறவினர்களின் ஆதரவில் வளர்ந்த ஹர்ஷிதா, வாழ்க்கையில் அதிகக் கஷ்டங்களைச் சந்தித்திருக்கிறாள். டீனேஜில் ஒரு காதல் பிரேக் அப் ஆக, உடைந்து போகிறாள். அவளைத் தேற்றுவதற்காக வந்தவனிடம் காதல் துளிர்க்க, கர்ப்பமாகிறாள்.

Vallamai Tharayo

அவனும் பிரிந்து சென்றுவிட்டாலும் அற்புதமான மகனைக் கொடுத்த அவன் மீது அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறாள். பிறகு வாழ்க்கையில் முன்னேற பிசினஸ் ஆரம்பிக்கிறாள். அங்கே ஒருவர் இவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார். அவருக்கோ ஏற்கெனவே திருமணமாகி, குடும்பமும் இருக்கிறது. இருவருக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. காதல் மட்டுமே இருப்பதால் சேர்ந்து வாழ்கிறார்கள். ஆனால், அவர் மாதத்தில் ஒரு வாரம் மட்டுமே ஹர்ஷிதாவுடன் இருப்பதால், தன்னுடைய தேவைக்கு ஒரு செக்ஸ் பார்ட்னருடன் உறவு வைத்திருப்பதாகச் சொல்கிறாள்.

தன்னுடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் தன்னம்பிக்கையுடனும் வாழும் ஹர்ஷிதா மீது அனுவுக்கு மரியாதை ஏற்படுகிறது. அபிதான் பேய் அறைந்தது போல் இருக்கிறாள். தனக்கு இதுபற்றி எந்தவிதமான அபிப்ராயமும் ஏற்படவில்லை என்கிறாள்.

ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை மீது கருத்து சொல்லவோ, தவறாக நினைக்கவோ யாருக்கும் உரிமை இல்லைதானே? ஒருவர் வாழ்க்கையிலிருந்து இன்னொருவரின் வாழ்க்கையைப் பார்க்கும்போது அவர்கள் வாழ்ந்த சூழல் தவறாக நினைக்க வைக்கலாம். ஆனால், அவர்களிடம் நெருங்கிப் பழகும்போது அந்த எண்ணம் மாறுபடவும் வாய்ப்பிருக்கிறது.

செக்ஸ் பார்ட்னர் என்ற பெயர் அபிக்கு மட்டுமல்ல, தமிழ்ச் சமூகத்துக்கும் அதிர்ச்சியாகவே இருக்கும். இனி என்ன நடக்கும்?

இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!

- எஸ்.சங்கீதா



source https://cinema.vikatan.com/women/vallamai-tharayo-digital-daily-series-readers-review-for-episode-16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக