திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது அக்கரைப்பட்டி கிராமம். இங்கு வசித்துவருபவர் இளங்கோவன். இவருக்கு பழனி நகர் அப்பர் தெருவில் சொந்தமாக 12 சென்ட் இடம் உள்ளது. அதன் அருகே, பழனியில் திரையரங்கம் வைத்துள்ளது பிரபல தொழிலதிபர் நடராஜ் வசித்து வருகிறார். இந்நிலையில், தனது வீடு அருகே உள்ள 12 சென்ட் இடத்தில் தனக்கு சொந்தமான இடம் இருப்பதாக நடராஜ் கூறியுள்ளார். அதனை இளங்கோவன் ஏற்க மறுத்துள்ளார். இந்த விவகாரம் கடந்த சில மாதங்களாகவே நீடித்துள்ளது.
Also Read: `தலைதூக்கும் நாட்டுத் துப்பாக்கி கலாசாரம்!' - போலீஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த அடுத்தடுத்த வழக்குகள்
இந்நிலையில், இன்று காலை, தனது உறவினர்களான பழனிசாமி மற்றும் சுப்பிரமணி ஆகிய இருவரை அழைத்துக்கொண்டு வந்த இளங்கோவன், 12 சென்ட் இடத்தில் வேலி அமைக்க முயன்றுள்ளர். இதனை அறிந்த நடராஜ், வேலி அமைக்க எதிர்ப்பு தெரித்ததோடு, அவர்களை தடுத்துள்ளார். அப்போது நடராஜிற்கும், இளங்கோவன் தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்த நடராஜ், இளங்கோவன் தரப்பினர் மீது சரமாரியாக சுட்டுள்ளார். இதில், இளங்கோவன் தப்பியோடவே, சுப்பிரமணி வயிற்றிலும் பழனிசாமி காலிலும் குண்டு பாய்ந்து சம்ப இடத்திலேயே சுருண்டு விழுந்தனர். அக்கம்பக்கத்தினர், இருவரையும் மீட்டு, பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நிலையில் நடராஜ் தலைமறைவானார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனி காவல்துறையினர், விசாரணை செய்து, சிகிச்சையில் இருந்த இருவரிடமும் வாக்குமூலம் பெற்று நடராஜை தேடினர். பின்னர், நடராஜ் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீஸார் தரப்பில் கூறும் போது, “நடராஜ் வைத்திருந்த துப்பாக்கிக்கு அவர் முறையான உரிமம் வைத்திருக்கிறார். இருந்தபோது, அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்திருக்கிறோம்” என்றனர்.
Also Read: திண்டுக்கல்: போலி பட்டா மூலம் நில அபகரிப்பு! - முன்ஜாமீன் பெற்ற சார்பதிவாளர்கள்
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை வட்டாரத்தில் தொடர்ச்சியாக நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுவரும் சூழலில், தற்போது பழனியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/crime/the-theater-owner-who-attacked-two-persons-with-his-pistol
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக