நான் ஒரு பிசினஸ்மேன். வாரத்துக்கு இரண்டு, மூன்று முறை டிராவல் செய்பவன். பயணம் செய்பவர்களுக்கு ஏர்போர்ட்டில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, ரிசல்ட்டுக்காக காத்திருக்கச் சொல்கிறார்கள். அவர்களுடன் மற்றவர்களும், அதாவது தொற்று இல்லாதவர்களுக்கும் இருக்கலாமல்லவா.... அப்படிக் காத்திருக்கும் நிலையில் அவர்களுக்கும், அந்தப் பகுதியில் நடமாடுபவர்களுக்கும் இதன் மூலம் தொற்றுப் பரவ வாய்ப்புள்ளதா? அடிக்கடி ஆர்டி பிசிஆர் டெஸ்ட் எடுப்பது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதா?
- அப்துல் காலிக் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் அப்துல் கஃபூர்.
``உங்கள் கவலை நியாயமானதே... நீங்கள் குறிப்பிடும்படி விமானநிலையத்தில் காத்திருக்கும் பகுதியில் எல்லோரும் அதிகபட்ச பாதுகாப்புடன் இருக்க வேண்டியது மிக முக்கியம். அந்தப் பகுதியில் ஒவ்வொருவரும் தனிமனித இடைவெளியை அவசியம் பின்பற்றியே தீர வேண்டும்.
சக பயணிகளுக்குப் பக்கத்தில் உட்காரவோ, நிற்கவோ கூடாது. எக்காரணம் கொண்டும் ஒரு நிமிடம்கூட மாஸ்க் இல்லாமல் இருக்க வேண்டாம். மாஸ்க் அணிவதோடு, அது மூக்கையும் வாயையும் முழுவதுமாக மூடும்படி முறையாக அணிய வேண்டியது மிக முக்கியம்.
Also Read: Doctor Vikatan: ஒமைக்ரான் பாதித்தவர்களைத் தனியே வைத்து சிகிச்சை அளிக்கச் சொல்வது ஏன்?
சரியான முறையில், அனுபவமுள்ள நபர்களால் செய்யப்படும்பட்சத்தில் கொரோனா தொற்றை உறுதிசெய்யும் ஆர்டி பிசிஆர் டெஸ்ட்டுகளை அடிக்கடி செய்வதில் எந்த பாதிப்பும் வராது."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
source https://www.vikatan.com/health/healthy/what-should-one-do-to-avoid-covid-19-spread-while-waiting-in-airport-for-test-results
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக