Ad

வியாழன், 2 டிசம்பர், 2021

AKS 73: காதலில் மிக உறுதியாக நிற்பவர்கள் அடையும் பலன்; பொற்கொடி பாண்டியனுக்காக செய்த தியாகம்!

கவிதா அலெக்சாவில் பாண்டியன் பதிவு செய்து வைத்திருந்தவற்றைக் கேட்டுவிட்டு பாண்டியனுக்கு கால் செய்கிறாள். அவன் கவிதாவின் காலை கட் செய்துகொண்டே இருக்கிறான். கவிதா பாண்டியன் வருகைக்காக மகிழ்ச்சியாகக் காத்திருக்கிறாள். பாண்டியன் வீட்டிற்கு வந்ததும் சந்தோஷமாக அவனை எதிர்கொண்டு கவிதா பேசத் தொடங்குகிறாள். அதற்குமுன் பாண்டியன் பொற்கொடியின் வீட்டில் நடந்தவற்றைச் சொல்கிறான். பொற்கொடியின் தந்தை பாண்டியன் வசதி குறைவான வீட்டுப் பையன் என்று சொல்லி பொற்கொடியை பாண்டியனுக்குத் திருமணம் செய்துதர முடியாது என்கிறார்.

AKS - பொற்கொடி

மாதம் 30 ஆயிரம் சம்பாதிக்கும் ஒருவனுக்கு எப்படி பெண்ணைக் கொடுப்பது என்பது காலம் காலமாக தங்களைவிட வசதி குறைவான ஆண்களை தங்கள் வீட்டு பெண்கள் காதலிக்கும்போது அவர்களது குடும்பத்தினர் சொல்வது. சாதி, மதம் காதலுக்குத் தடையாக இருப்பதுபோல பலருக்கு பணமும் பிரச்னையாக இருக்கின்றது. பொற்கொடியின் தந்தை பாண்டியனுக்கு வசதி இல்லை என்று பொற்கொடியின் காதலை ஏற்க மறுப்பதால், பொற்கொடி அவரது சொத்து, பணம் எதுவும் தனக்கு வேண்டாம் என்று பாண்டியனுடன் தானும் வெளியேறுவதாகச் சொல்லி கிளம்புகிறாள்.

பொற்கொடியின் தந்தை பத்திரத்தில் சொத்து வேண்டாம் என்று கையெழுத்து போட்டு தரச் சொல்கிறார். பொற்கொடி அது செல்லாது என்பதால் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு எப்போது அழைத்தாலும் வருவதாகச் சொல்லிவிட்டு கிளம்புகிறாள். பொற்கொடியின் தந்தை பொற்கொடியையும், பாண்டியனையும் நிற்கச் சொல்லி பாண்டியனிடம் அவனது பெற்றோரை அழைத்து வரச் சொல்கிறார். பொற்கொடியின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கிறார். பொற்கொடியைப் போல தனக்கு பெற்றோர்களின் சொத்து, பணம் எதுவும் தேவையில்லை என்று காதலில் மிக உறுதியாக நிற்பவர்கள் இந்தத் தலைமுறையில் மிகக் குறைவானவர்களே.

பொற்கொடி

அதிலும் பொற்கொடியின் தந்தையைப்போல மகள் காதலின் தீவிரத் தன்மையை புரிந்துகொண்டு அதை ஏற்றுக்கொள்பவர்களும் மிக அரிது.பொற்கொடியும் பாண்டியனும் தங்கள் கையில் இருவர் பெயரின் முதல் எழுத்தை டாட்டூ போட்டுக் கொள்கின்றனர். பொற்கொடி பிரியப்பட்டு தன் கையில் டாட்டூ போட்டுக்கொள்ள, அதைக் கண்டு பாண்டியன் தானும் போட்டுக் கொள்கிறான். பொற்கொடியின் காதலுக்கு இணையாக தான் எதுவும் செய்ய முடியாவிட்டாலும் ஓரளவு அவளின் காதலுக்கு ஈடு கொடுத்து ஓட முயற்சி செய்வதாக பாண்டியன் கவிதாவிடம் சொல்கிறான்.

பாண்டியன் தானே சொன்னது போல பொற்கொடி வலிய வந்து தன்னிடம் காதலிப்பதாகக் கூறியதைப் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் நினைக்கிறான். அதனால் உடனடியாக அவளது காதலை ஏற்றுக் கொள்கிறான். பாண்டியன் பொற்கொடி செய்பவற்றை அவளுக்கு ஈடு கொடுப்பதுபோல தானும் செய்ய வேண்டும் என்று நினைப்பதாக கவிதாவிடம் சொல்கிறான். காதலில் அதற்கெல்லாம் அவசியம் இல்லை. பொற்கொடி பாண்டியன் மேல் வைத்திருக்கும் அதே அளவு அன்பு பாண்டியனுக்கும் இயல்பாக பொற்கொடியின்மீது வர வேண்டும். அது பொற்கொடியுடன் பழகப் பழக நடக்கலாம்.

பொற்கொடியின் பெற்றோர்

அதேபோல் பொற்கொடியின் காதலை முதலில் யோசிக்காமல் ‘ஏற்றுக் கொண்டதாக’ பாண்டியன் சொல்கிறான். காதலை மனதார முழுவதுமாக உணராமல் ‘ஏற்றுக்கொள்ளுதல்’ நிரந்தர உறவை உண்டாக்காது. காதலைச் சொன்னவுடன் காதலரின் பெயரை டாட்டூ போட்டுக்கொள்வது, பிறகு அந்த காதலில் இருந்து பிரியும் போது டாட்டூவை அழிக்க முயற்சி செய்வது, முடியாவிட்டால் வேறு ஒரு டிசைனாக மாற்றிக் கொள்வதெல்லாம் இந்த தலைமுறையினரின் காதல் பிரச்னைகள்.சுந்தர் தற்கொலைக்கு முயற்சி செய்கிறான். அவன் தங்கி இருந்த விடுதியில் இருப்பவர்கள் பார்த்து மருத்துவமனையில் சேர்க்கின்றனர். காயத்ரி, புனிதா, சிவா, பரத் நான்கு பேரும் சுந்தர் கண்விழிப்பதற்காக காத்திருக்கிறார்கள். பரத் சமூக வலைதளத்தில் உதவிகேட்டு சுந்தருக்கு ரத்தம் ஏற்பாடு செய்கிறான்.

காயத்ரி அழுதுகொண்டே இருக்கிறாள். அவளுக்கு சுந்தர் தன்னால் தான் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறான் என குற்ற உணர்ச்சியாக இருக்கின்றது. காயத்ரிக்கு சுந்தரின் அக்கா கால் செய்கிறார். சுந்தர் அவரது கால்களை அட்டென்ட் செய்யவில்லை என்பதால் காயத்ரிக்கு கால் செய்திருப்பதாக சொல்கிறார். சுந்தர் வேலை விசயமாக வெளியூர் சென்றிருப்பதாகவும் போனை அறையில் மறந்திருக்கலாம் என்றும் காயத்ரி சொல்கிறாள். ஆனால் காயத்ரி பதட்டமாக இருந்தது சுந்தரின் அக்காவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

மருத்துவமனையில் கலங்கும் கவிதா

காயத்ரி வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லி விடலாம் என்று சொல்ல, புனிதா காயத்ரியிடம் இப்போதைக்கு சொல்ல வேண்டாம், சுந்தர் கண்விழித்த பின்பு சொல்லிக் கொள்ளலாம் என்று சொல்கிறாள். இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தில் முதலில் சொல்வது தான் முறை. சுந்தர் சுயநினைவில்லாமல் இருக்கும் சமயத்தில் சுந்தரின் வீட்டில் இதை மறைப்பது காயத்ரிக்கு மென்மேலும் பிரச்னைகளையே உருவாக்கும்.

எல்லா கதவுகளும் அடைத்துக்கொண்டது போல் இருக்கும் கவிதாவின் காதலின் அடுத்த நிலை என்ன?

காத்திருப்போம்!



source https://cinema.vikatan.com/television/article-about-youtube-original-series-aadhalinaal-kadhal-seiveer-episode-73

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக