நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று உரை!
இந்தியாவில் மெகா கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்ட 9 மாதங்களில் 100 கோடி டோஸ் என்கிற இமாலைய இலக்கை எட்டியுள்ளது. 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்த இந்தியாவுக்கு உலக நாடுகள் பாராட்டு தெரிவித்து உள்ளன. இந்த நிலையில் தான் பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். நாட்டு மக்களிடம் மோடி உரையாற்ற உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்றைய உரையில் வேறு ஏதேனும் அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது!
source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-22-10-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக