இன்றைய பஞ்சாங்கம்
27. 5. 21 வைகாசி 13 வியாழக்கிழமை
திதி: பிரதமை பகல் 3.09 வரை பிறகு துவிதியை
நட்சத்திரம்: கேட்டை
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பகல் 1.30 முதல் 3 வரை
எமகண்டம்: காலை 6 முதல் 7.30 வரை
நல்லநேரம்: காலை 10.30 முதல் 11.30 வரை
சந்திராஷ்டமம்: பரணி
சூலம்: தெற்கு
பரிகாரம்: தைலம்
வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
கலி முற்றியதன் அடையாளங்கள் எவை?
நம் முன்னோர்கள் காலத்தை நான்கு யுகங்களாகப் பிரித்திருக்கிறார்கள். கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது கலியுகம் நடந்துவருவதாக ஐதிகம். இந்த நான்கு யுகங்களில் மிகவும் சிறிய யுகம் கலியுகம் என்றும் சொல்கிறார்கள். கலியுகம் மொத்தம் நான்கு லட்சத்து முப்பத்து இரண்டாயிரம் ஆண்டுகள் என்று ஒரு கணக்கும் சொல்வார்கள்.
பொதுவாக ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் அதர்மம் அதிகரிக்கும் என்றும் அதை அழிக்க பகவான் அவதாரம் எடுத்து வருவார் என்றும் புராணங்கள் சொல்கின்றன. தற்போது நடந்துவரும் பேரழிவுகளை எல்லாம் பார்க்கும் சிலர் இது கலியின் முடிவா என்று கேட்கிறார்கள். ரிஷிகள், கலிகாலம் முடியும் போது எவை எல்லாம் நடைபெறும் என்று தம் ஞான ஸித்தியினால் கண்டு எழுதி வைத்திருக்கிறார்கள். அப்படி அவர்கள் எழுதி வைத்திருக்கும் சில அடையாளங்களை அறிந்துகொள்ள கீழே இருக்கும் வீடியோவைப் பாருங்கள்.
இன்றைய ராசிபலன்
இன்றைய விரிவான பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
மேஷம் -
கவலை : இன்று இரவுவரை சந்திராஷ்டமம் உள்ளது. எனவே தேவையற்ற சிந்தனைகள் தோன்றும். கவலைகள் அதிகரிக்கும். இறைவழிபாடு செய்யுங்கள் - எல்லாம் அவன் செயல்!
ரிஷபம்
நன்மை : முக்கியமான வேலைகளை இன்றே பேசி முடித்துவிடுங்கள். வீண் செலவுகள் குறித்துக் கவலைப்படுவீர்கள். காரியங்கள் அனுகூலமாவது மகிழ்ச்சி அளிக்கும். - நாள் நல்ல நாள்!
மிதுனம்
அனுகூலம் : செயல்கள் அனுகூலமாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பின்னடைவுகள் நீங்கும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். - என்ஜாய் தி டே!
கடகம்
ஆரோக்கியம் : முற்பகலில் சில தடைகள் ஏற்பட்டாலும் பிற்பகலுக்கு மேல் நற்செய்திகள் தேடிவரும். என்றாலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. - ஹெல்த் இஸ் வெல்த்!
சிம்மம்
பொறுமை : அனைத்தும் சாதகமாக இருந்தபோதும் சொல்லிலும் செயலிலும் பொறுமையை அவசியம். எதிர்பார்த்த செய்திகள் வந்து சேர்வது ஆறுதலாக இருக்கும். - ரிலாக்ஸ் ப்ளீஸ்!
கன்னி
சாதகம் : பணவரவு அதிகரிக்கும். நீண்டநாள்களாக நிலுவையில் இருந்த பிரச்னை ஒன்று முடிவுக்கு வரும். குடும்பத்தினர் ஒத்தாசையாக இருப்பார்கள். - சாதகமான ஜாதகம் இன்று!
துலாம்:
தன்னம்பிக்கை : மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு முக்கிய முடிவு ஒன்றை எடுப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும்.- நம்பிக்கை அதுதானே எல்லாம்!
விருச்சிகம்
நிதானம் : குடும்பத்தினரிடம் பேசும்போது சொற்களில் நிதானம் தேவை. நீங்கள் சொல்வதைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள். செலவுகளில் சிக்கனம் தேவை. - டேக் கேர் ப்ளீஸ்!
தனுசு:
தாமதம் : எதிர்பார்த்த செய்திகள் தாமதமாகும். எதிர்பார்த்த உதவிகள் பிற்பகலுக்கு மேல் கிடைக்கும். மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று மாலையில் வந்து சேரும். - நல்லதே நடக்கும்!
மகரம்
மகிழ்ச்சி : மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் தேடிவரும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். துணிச்சலோடு செயல்படுவீர்கள். வெற்றிகள் கிடைக்கும் . - ஜாலி டே!
கும்பம்
பணவரவு : எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். திட்டமிடுதலில் கூடுதல் கவனம் தேவை. நிதானமாகச் செயல்படுவது நல்லது - ஆல் தி பெஸ்ட்!
மீனம்
தெளிவு : நேற்றுவரையிருந்த பிரச்னைகள் நீங்கும். புதுத் தெம்பு பிறக்கும். உற்சாகமாகப் பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்களிடம் பேசும்போது சொற்களில் கவனம் தேவை. - நா காக்க!
source https://www.vikatan.com/spiritual/astrology/are-we-nearing-the-end-of-kali-yuga
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக