Ad

சனி, 10 அக்டோபர், 2020

குமரி: `போலீஸ், அவரோட ஃபேமிலிய பிடிச்சு மிரட்டுறாங்க!’ - மாயமான இளம்பெண் வெளியிட்ட வீடியோ

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே நெய்யூர் பகுதியை சேர்ந்தவர் செல்வின். இவரது மகள் சஜி (19). சஜி நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கால் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலிருந்தே ஆன்லைன் வகுப்பில் கல்வி பயின்று வந்தார். இந்த நிலையில் கடந்த 3-ம் தேதி வீட்டில் இருந்த சஜி திடீரென மாயமாகியிருக்கிறார். மகளை காணவில்லை என சஜியின் தந்தை செல்வின் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து சஜியை தேடி வந்தனர். இந்த நிலையில் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த ஷியாங்கோ என்ற வாலிபருடன் சஜி சென்றது தெரியவந்துள்ளது. போலீஸார் ஷியாங்கோவின் குடும்பத்தினரை பிடித்து வந்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

ஷியாங்கோ

இந்த நிலையில் சஜி திடீரென ஒரு வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சஜி கூறுகையில், ``என்னோட பேரு சஜி. நான் ஸ்கூல் படிக்கும்போது ஒரு பையன லவ்பண்ணினேன். அவனோட பேரு ஷியாங்கோ. நாங்க ரெண்டு பேரும் வேற வேற மதத்தை சேர்ந்தவங்க... அதனால இத எங்க பேரன்ட்ஸ் ஒத்துக்கல. ப்ராப்ளம் நெறய வந்துச்சு. காஸ்ட் பத்தி குத்திக்காட்டி பேசினாங்க. அது எனக்கு பிடிக்கல. அதனால ஷியாங்கோவுக்கு ஒரு மெயில் பண்ணினேன். அதில் நான் சூசைட் பண்ணப்போறேன், அவங்க பேசுறது பிடிக்கலன்னு சொன்னேன். அதுக்கு அவன், அப்பிடி ஒன்னும் பண்ணாதன்னு அவன் சொன்னான். அவ்வளவு அக்கறையா இருந்தா, நீ என்ன வந்து கூட்டிட்டு போயிருன்னு நான் சொன்னேன். அதனாலதான அவன் வந்து என்ன கூட்டிகிட்டுபோனான்.

இதுல அவனுக்கும் அவனோட பேமிலிக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. நாங்க மேஜர்னு தெரிஞ்சும், எங்க விருப்பத்தோடதான் வீட்டவிட்டு வெளிய வந்திருக்கோம்னு தெரிஞ்சும் இரணியல் போலீஸ் ஸ்டேஷன்ல உள்ளவங்க, அவரோட பேமிலிய பிடிச்சு மிரட்டிட்டு இருக்காங்க. என்ன அங்க கூட்டிகிட்டுபோனாதான் அவங்கள விடுவேன்னு சொல்லுறாங்க. இப்பிடி அவங்க பண்ணிகிட்டிருந்தாங்கன்ன நான் ஏற்கனவே என்னபண்ணுவேன்னு சொன்னேனோ அத பண்ணுவேன்.

வீடியோ வெளியிட்ட இளம் பெண்

அதுக்கு காரணம் அவரும், அவருக்க ஃபேமிலில உள்ளவங்களும் கண்டிப்பா இருக்கமாட்டாங்க. அதுக்கு காரணம் என்னோட ஃபேமிலில உள்ளவங்களாத்தான் இருப்பாங்க. இது அவங்க பேசச்சொல்லி ரெக்கார்ட் பண்ணினதா நினைப்பாங்க. அப்பிடி எல்லாம் கிடையாது. நான் என்னோட மனசுல உள்ளத நான் சொல்லுறேன்" என அந்த வீடியோவில் பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுபற்றி இரணியல் போலீஸ் தரப்பில் கூறுகையில், "மகளை காணவில்லை என்று பெற்றோர் கொடுத்த புகாரின் மிஸ்ஸிங் கேஸ் போட்டு விசாரணை நடத்தி வருகிறோம். நாங்கள் யாரையும் பிடித்து வைக்கவில்லை" என்றனர்.



source https://www.vikatan.com/news/general-news/kumari-missing-young-girl-released-a-video

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக