Ad

செவ்வாய், 11 மே, 2021

கொரோனா தொற்று: ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் காலமானார்!

சி.பி.ஐ-யின் முன்னாள் எஸ்.பி.யும், ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முதன்மை விசாரணை அதிகாரியாகவும் செயல்பட்ட ராகோத்தன், கொரோனா தொற்றால் காலமானார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 72 `ராஜீவ் காந்தி கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்’ என்று கொலை வழக்கு தொடர்பாக புத்தகமும் எழுதி இருக்கிறார் ராகோத்தன்.

ரகோத்தமன்

ரவிக்குமார் எம்.பி, தனது ட்விட்டர் பதிவில், ``சிபிஐ எஸ்பி ஆகப் பணியாற்றி ஓய்வுபெற்றவரும் தொலைக்காட்சி விவாதங்களில் நடுநிலையோடு, துணிச்சலாக, தெளிவாகத் தனது கருத்துகளை முன்வைப்பவருமான ரகோத்தமன் அவர்கள் கொரோனாவுக்குப் பலியானார் என்ற செய்திகேட்டு துயருற்றேன். அவருக்கு என் அஞ்சலி” என பதிவிட்டிருக்கிறார்.



source https://www.vikatan.com/news/general-news/former-cbi-officer-ragothaman-passed-away-due-to-covid-19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக