Ad

திங்கள், 9 நவம்பர், 2020

`பீகாரில் ஆட்சியை பிடிப்பது யார்?’ , `மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி தப்புமா?’ - இன்று வாக்கு எண்ணிக்கை #LiveUpdates

பீகார் தேர்தல் முடிவுகள்:

ஜே.டி.யு + பா.ஜ.க கூட்டணி - 00

ஆர்.ஜே.டி + காங்கிரஸ்(மகா கூட்டணி) - 00

மற்றவை - 00

பீகாரில் வெல்லப்போவது யார்....?

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜ.க இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணியும் முக்கிய கட்சியாக களத்தில் உள்ளன.

ராஷ்டிரீய லோக் சமதா கட்சி தலைமையில் ஒரு அணியும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்த ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி தனியாகவும் போட்டியிட்டன. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. பீகாரின் வால்மிகி நகர் நாடாளுமன்ற தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தல் முடிவும் இன்று வெளியாகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்த முறை தேர்தலில் அதிகபடியான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. கூடுதல் எந்திரங்கள் காரணமாக தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஆகும் எனவும் கூறப்படுகிறது. இதனால் தேர்தல் முடிவுகள் வெளியாகை மாலை வர ஆகலாம் என்று கூறப்படுகிறது.

பீகார் தேர்தல் களம்

கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி, தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று நிதிஷ்குமார் மீண்டும் முதல்வர் ஆவார் என்று ஆளும் கூட்டணி நம்பிக்கையாக உள்ளது. எனினும் மெகா கூட்டணி வெற்றி பெற்றால் ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் முதல்வர் ஆவார். அவ்வாறு அக்கூட்டணி ஆட்சி அமைத்தால், இந்தியாவிலேயே மிக இள வயதில் முதல்வர் ஆனவர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பீகார்: `மேஜிக் நம்பர் 122; வெல்லப்போவது யார்?’ - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்

மத்தியபிரதேச இடைத்தேர்தலும் முக்கியம்!

தவிர பீகார் சட்டசபை தேர்தலுடன் நாட்டின் 10 மாநிலங்களில் 58 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற்று இருந்தது. இந்த தேர்தல் முடிவுகளும் இன்று வெளியாகின்றன. மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முக்கியமானது. ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் காங்கிரஸில் இருந்து விலகியதால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு நடந்த இடைத்தேர்தலாகும். அவர்கள் விலகியதால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பா.ஜ.க அரசு பதவியேற்றது.

சிவராஜ் சிங் சௌகான்

இந்த தேர்தலில் குறைந்தபட்சம் 8 இடங்களில் வெற்றி பெற்றால்தான் மாநிலத்தில் சிவராஜ் சிங் சௌகான் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி தொடரும். இதனால் பீகார் தேர்தலை போலவே மத்திய பிரதேச இடைத்தேர்தல் முடிவுகளும், நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தவிர உத்தரபிரதேசம், அரியானா, மணிப்பூர், கர்நாடகா, ஜார்கண்ட், நாகலாந்து, ஒடிசா மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் இன்று நடக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/election/bihar-and-other-by-election-results-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக