Ad

செவ்வாய், 10 நவம்பர், 2020

ரகசியத் திருமணம் செய்துகொண்டாரா பிரபுதேவா... உண்மை என்ன?!

குரூப் டான்ஸராக அறிமுகமாகி நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என திரையுலகில் பன்முகத் திறமைகளை வெளிப்படுத்துக்கொண்டிருப்பவர் பிரபுதேவா. தற்போது தமிழ், தெலுங்கு சினிமாக்களைவிட இந்தியில்தான் அதிகம் பிஸியாக இருக்கிறார். சல்மான் கான், திஷா பதானி, ஜேக்கி ஷெராஃப் ஆகியோரை வைத்து 'ராதே' படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இதில் பரத், மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
சல்மான் கான் - பிரபுதேவா

1995 ரம்லத் என்பவரை காதலித்து திருமணம் செய்த பிரபுதேவாவுக்கு மூன்று மகன்கள். இதில் மூத்தமகன் பசவராஜு புற்றுநோய் காரணமாக 2008-ம் ஆண்டு காலமானார். போக்கிரிக்கு அடுத்து விஜய்யை வைத்து 'வில்லு' படத்தை பிரபுதேவா இயக்கியபோது, நயன்தாராவுடன் காதல் மலர்ந்தது. இந்த காதல், திருமணம் வரை செல்ல, மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்தார். ஆனால், 2012-ம் ஆண்டு பிரபுதேவாவும் நயன்தாராவும் சுமூகமாகப் பிரிந்துவிட்டனர். தனது கையில் 'பிரபு' என்று அச்சிடப்பட்ட டாட்டூவைத்தான் பின்னாளில் 'Positivity' என மாற்றினார், நயன்.

Also Read: சிம்பு with பழனி முருகன்!

அஜய் தேவ்கனை வைத்து 'ஆக்‌ஷன் ஜாக்சன்' என்ற படத்தை பிரபுதேவா இயக்கிவந்த சமயத்தில் சென்னையில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது, "இன்னொரு திருமணம் செய்து கொள்வீர்களா?" என்று ஒரு நிருபர் கேள்வி கேட்க, "என் வாழ்க்கையில், இன்னொரு திருமணம் கிடையாது. எனக்கு சினிமாவும், என் குழந்தைகளும்தான் முக்கியம். வேறு எதைப்பற்றியும் நான் நினைப்பதில்லை" என்று பதிலளித்திருந்தார்.

பிரபுதேவா

ஆனால், தற்போது தனது உறவுப் பெண்ணை பிரபுதேவா ரகசியத் திருமணம் செய்துகொண்டார் எனத் தகவல் கிடைக்க உண்மை என்ன என விசாரித்தோம். "பிரபுதேவா தற்போது கிழக்குக் கடற்கரைச்சாலையில் வசித்துவருகிறார். அவர் இன்னும் முறைப்படி திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால், ரிலேஷன்ஷப்பில் இருக்கிறார். அந்தப் பெண் ஒரு டாக்டர். விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வரும்" என்றார்கள். இதுதொடர்பாக பிரபுதேவாவிடம் கேட்க அவரைத்தொடர்பு கொள்ள முயன்றோம். அவர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாகத் தகவல் வந்தது.



source https://cinema.vikatan.com/tamil-cinema/the-truth-behind-prabhudeva-marriage-rumours

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக