Ad

செவ்வாய், 6 அக்டோபர், 2020

வேலூர்: `மனைவியின் காதலன் வெட்டிக் கொலை!’ - ஓராண்டுக்குப் பிறகு பழிதீர்த்த இளைஞர்

வேலூர் சலவன்பேட்டை கச்சேரி ஸ்கூல் தெருவைச் சேர்ந்தவர் கோபி (38), கார் ஓட்டுநர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் (35) என்பவரது மனைவி ரமணிக்கும் பழக்கம் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இருவருக்குமான நெருக்கம் அதிகமானதையடுத்து, ஓராண்டுக்கு முன்பு கணவரைப் பிரிந்த ரமணி, காதலன் கோபியுடன் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

வேலூர்

தற்சமயம், இருவரும் பெங்களூருவில் குடும்பம் நடத்திவந்ததாகவும் கூறப்படுகிறது. தனக்கு துரோகம் செய்த மனைவி ரமணிமீதும் அவரை அழைத்துச் சென்ற காதலன் கோபி மீதும் சரவணன் கொலை வெறியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து வேலூருக்கு வந்துள்ளார் கோபி.

Also Read: `சென்னை வழக்கறிஞர் கொலை!’ - வாணியம்பாடி நீதிமன்றத்தில் சரணடைந்த ரௌடி கும்பல்

இதையறிந்த சரவணன் அவரை தீர்த்துகட்ட முடிவுசெய்துள்ளார். அதன்படி, அம்மனாங்குட்டை என்ற பகுதியில் நின்றிருந்த கோபியை நேற்று முன்தினம் இரவு சரவணன் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியதாகவும் கூறப்படுகிறது. உறவினர்கள் கோபியை மீட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட கோபி

சிகிச்சைப் பலனின்றி கோபி நேற்று மரணமடைந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக, வேலூர் தெற்கு காவல்நிலைய போலீஸார், வழக்குப்பதிவு செய்து சரவணனை தீவிரமாக தேடி வருகிறார்கள். கொலைக்கு உடந்தையாக மேலும் இரண்டுப் பேர் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களைப் பிடிக்கவும் போலீஸார் தீவிரம் காட்டிவருகிறார்கள்.



source https://www.vikatan.com/news/crime/vellore-man-kills-wifes-lover

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக