Ad

திங்கள், 12 அக்டோபர், 2020

வேளாங்கண்ணி: 15 வயது சிறுமி கடத்தல்; பாலியல் வன்கொடுமை! 17 வயது சிறுவன் போக்சோவில் கைது

சிறுமியை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன்,  போக்சோ சட்டத்தில்  கைதுசெய்யப்பட்டு தஞ்சை சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டிருக்கிறான்.

பாலியல் வன்கொடுமை

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அருகே 15 வயது சிறுமியைக் காணவில்லை என அந்தச் சிறுமியின் தந்தை கடந்த 5- ம்  தேதி வேளாங்கண்ணி காவல் நிலையத்தில்  புகார் கொடுத்தார். அதன்பேரில் வேளாங்கண்ணி போலீஸார் வழக்கு  பதிவு செய்து, காணாமல் போன சிறுமியைத் தேடிவந்தனர்.

Also Read: உ.பி அதிர்ச்சி: பாலியல் தொல்லை கொடுத்த உறவினர்! - மருத்துவமனையில் உயிரிழந்த 6 வயது சிறுமி

இந்தநிலையில், நாகை பேருந்து நிலையத்தில் அந்தச் சிறுமியுடன் 17 வயதுடைய ஒரு சிறுவன் பேசிக்கொண்டிருப்பதாக  வேளாங்கண்ணி போலீஸாருக்கு நேற்று ரகசியத் தகவல் கிடைத்தது. உடனே அவர்களைப் பிடித்து விசாரணை செய்ததில், அந்தச்  சிறுவன் கீழையூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவன் என்றும், அவன் டிப்ளோமா படித்தவன் என்றும் தெரியவந்தது. மேலும் அந்தச்  சிறுவனும், சிறுமியும் சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகமாகி பழகி வந்திருக்கிறார்கல். இந்த நெருக்கத்தைப் பயன்படுத்திக்கொண்ட சிறுவன், ஆசைவார்த்தை கூறி  சிறுமியை அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் போலீஸார் விசாரனையில் தெரியவந்தது.

இது குறித்து வேளாங்கண்ணி போலீஸாரிடம் கேட்டபோது, ``இருவருமே 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள். அந்தச் சிறுவன், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பதால், போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து தஞ்சாவூர் இளஞ்சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பியிருக்கிறோம்" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/velankanni-police-arrests-17-year-old-in-pocso

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக