தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக நேற்று தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்த நிலையில் இன்று காலை திமுக தலைவர் ஸடாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். முன்னதாக கருணாநிதி நினைவிடத்தில் தேர்தல் அறிக்கையை வைத்து மரியாதை செய்தார். அறிவிப்பு நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், ``தேர்தல் அறிக்கையில் 500 திட்டங்கள் இருக்கிறது. அதில் முக்கியமானவற்றை அறிவிக்கிறோம்” என்றார்
திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
கொரோனா நிவாரணமாக ரேஷன் அட்டை தாரர்களுக்கு ரூ. 4000 வழங்கப்படும்.
அ.தி.மு.க அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குக்கு தனி நீதிமன்றம் அமைக்கப்படும்.
ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும்
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தப்படும்
பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.4 குறைக்கப்படும்
சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும்
கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வரும் வரை சொத்துவரி உயர்த்தப்படாது
சட்டப்பேரவை நிகழ்வு நேரலையாக டி.வி.யில் ஒளிபரப்பு
இந்து ஆலயங்களை சீரமைக்க ஆயிரம் கோடி ஒதுக்கீடு
தேவாலயங்களை சீரமைக்க ரூ.200 கோடி ஒதுக்கப்படும்
தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்
விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்
மேலும் அம்சங்கள் விரைவில்...
source https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-2021-election-manifesto-announced
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக