Ad

சனி, 20 மார்ச், 2021

தஞ்சை மாவட்டத்தில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா! #NowAtVikatan

தஞ்சை மாவட்டத்தில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா!

தஞ்சை மாவட்டத்தில் 11 பள்ளிகளில் 143 பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் 66 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ளவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கும்பகோணம் தனியார் மேல்நிலைப்பள்ளியில் ஏற்கனவே ஒரு ஆசிரியர் 6 மாணவிகளுக்கு தொற்று ஏற்பட்டிருந்தது.

கொரோனா

இந்நிலையில் 1,200 மாணவர்களுக்கு சோதனை செய்ததில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கை மொத்தம் 168 ஆக உயர்ந்துள்ளது.

-குணசீலன்



source https://www.vikatan.com/news/general-news/21-03-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக