Ad

திங்கள், 19 அக்டோபர், 2020

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை! #NowAtVikatan

சென்னையில் கனமழை!

தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாள்களாகவே கன மழை பெய்து வருகிறது. இன்று காலை முதலே சென்னையில் இருள் சூழ்ந்த சூழலே காணப்பட்ட நிலையில், நல்ல மழையும் பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே கன மழை பெய்து வருவதால், இருசக்கர வாகனங்களில் பணிக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆங்காங்கே சாலையிலும் தண்ணிர் தேங்கி உள்ளது. சென்னை மட்டுமல்லாது, மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகலிலும் கனமழை பெய்து வருகிறது.

மழை

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் இன்னும் 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தெலங்கானா, ஆந்திரா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/20-10-2020-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக