Ad

திங்கள், 26 அக்டோபர், 2020

கரூர்: மின்பெட்டிக்குப் பொட்டுவைத்த இளைஞருக்கு நேர்ந்த துயரம்! - ஆயுதபூஜைக் கொண்டாட்ட சோகம்

குளித்தலை அருகே ஆயுத பூஜையைக் கொண்டாடும்விதமாக தோட்டத்தில் உள்ள மின்சாரப் பெட்டிக்கு பொட்டு வைத்த இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்து, அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

குளித்தலை

கரூர் மாவட்டம், குளித்தலை அருகில் உள்ள அய்யர்மலை பகுதியைச் சேர்ந்தவர், மணிகண்டன். இவர் நேற்று முன்தினம் ஆயுத பூஜையை கொண்டாடுவதற்கு ஆயத்தமானார்.

Also Read: கரூர்: பட்டப்பகலில் கத்திமுனையில் 15 பவுன் நகை வழிப்பறி! - ஆசிரியைகளுக்கு நேர்ந்த சோகம்

தனது வீட்டில் உள்ள பொருள்களை சுத்தம் செய்து, அந்தப் பொருள்களுக்கு பொட்டு வைத்து, சாமி கும்பிட்டார். பின்னர், தனது வீட்டுக்கு அருகில் உள்ள தோட்டத்தில் இருந்த மின்சாரப் பெட்டிக்கு பொட்டு வைத்துள்ளார்.

குளித்தலை

அப்போது, எதிர்பாராதவிதமாக அவர்மீது மின்சாரம் பாய்ந்து, அவர் தூக்கியெறியப்பட்டார். இதனால், மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், குளித்தலை காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் குளித்தலை காவல் நிலைய போலீஸார், சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு விரைந்து வந்தனர். மணிகண்டனின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, குளித்தலை காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மார்ச்சுவரி

ஆயுதபூஜையையொட்டி, தனது தோட்டத்து மின்சாரப் பெட்டிக்கு பொட்டு வைக்கும்போது இளைஞர் ஒருவர் இறந்த சம்பவம், அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/accident/kulithalai-youth-died-of-electric-shock

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக