Ad

செவ்வாய், 13 அக்டோபர், 2020

`குஷ்பு பா.ஜ.க-வை விமர்சித்த கதை அனைவருக்கும் தெரியும்!'- பி.டி.அரசகுமார்

பா.ஜ.க-விலிருந்து விலகி தி.மு.க-வில் இணைந்த பி.டி.அரசகுமாருக்கு சமீபத்தில் தி.மு.க-வில் மாநிலச் செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில், புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியிலுள்ள தி.மு.க மாவட்ட அலுவலகத்துக்கு வந்த பி.டி.அரசகுமாருக்கு தி.மு.க-வினர் உற்சாக வரவேற்பளித்தனர்.

பி.டி.அரசகுமார்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.டி.அரசகுமார், ``காங்கிரஸில் இருக்கும்போது நடிகை குஷ்பு பா.ஜ.க-வை எவ்வளவு விமர்சனம் செய்தார் என்பது அனைவருக்குமே தெரியும். பெண்கள் மத்தியில் குஷ்பு மீது எந்த மாதிரியான அபிப்பிராயம் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த விஷயம். பா.ஜ.க-வில் யார் இணைந்தாலும், நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம்.

Also Read: `நாட்டுக்கு எது நல்லது எனப் புரிந்தது; கொள்கை மாறவில்லை!’ - பா.ஜ.க-வில் இணைந்த குஷ்பு

`நாங்கள்தான் முதல்வராவோம்’ எனத் தரைமேல் குதித்தாலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-தான் வெற்றிபெற்று கோட்டையைப் பிடிக்கும். `தி.மு.க-வுக்கு நான் புதியவன்’ என்று நினைக்கிறார்கள். தி.மு.க-வுக்கு நான் புதியவன் கிடையாது. கருணாநிதி காலத்திலேயே தி.மு.க இலக்கிய அணியிலிருந்து கலக்கியவன். இங்கிருக்கும் அனைவரின் ரத்தத்திலும் திராவிட சிந்தனைகள் கலந்திருக்கின்றன.

பி.டி.அரசகுமார்

மாற்றுக் கட்சியிலிருந்து வந்திருந்தாலும், தி.மு.க-வில் திறமையையும் தகுதியையும் பொறுத்தே, பதவிகளும் பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. தி.மு.க என்பது எஃகு கோட்டை; அதை யார் கொட்டினாலும், கொட்டுபவர்களின் கைதான் வலிக்கும். தி.மு.க-வில் உட்கட்சிப் பூசல் எதுவும் இல்லை. இந்த முறை தமிழகத்தில் கண்டிப்பாக தி.மு.க ஆட்சி அமைக்கும்.’’ என்றார்.



source https://www.vikatan.com/news/politics/dmk-spokes-person-pt-arasakumar-speaks-abour-kushboo-and-bjp

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக