தேவையானவை:
போன்லெஸ் ஆட்டுக்கறி - அரை கிலோ
பாஸ்மதி அரிசி - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 2 (அரை நிலா வடிவம் போல வெட்டவும்)
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2
சீரகம் - அரை டீஸ்பூன்
ரோஸ் வாட்டர் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
கீரா வாட்டர் - 1 டீஸ்பூன் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்)
புதினா - அரை கைப்பிடி
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
முந்திரி - 50 கிராம் (எண்ணெயில் பொரித்தது)
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது - 1 டீஸ்பூன் (வெண்ணெயில் வதக்கி மையாக அரைக்கவும்)
கெட்டித் தயிர் - 200 மில்லி
பெங்களூர் தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது)
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
ஃப்ரைடு ஆனியன் - 100 கிராம்
எண்ணெய் - 50 மில்லி
குங்குமப்பூ- சிறிதளவு (2 டேபிள்ஸ்பூன் காய்ச்சிய பாலில் ஊறவைத்துக் கொள்ளவும்)
நெய் - 50 மில்லி
எலுமிச்சைப்பழம் - 1
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஆட்டுக்கறியை நன்கு கழுவிக் கொள்ளவும். இதில் அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள், உப்பு, ஒரு டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது, தயிர், எலுமிச்சைச்சாறு சேர்த்து கலந்து ஒரு மணி நேரம் ஊற விடவும். பாஸ்மதி அரிசியை 20 நிமிடங்கள் தண்ணீர் ஊற்றி ஊற விடவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதித்ததும் வடிகட்டிய பாஸ்மதி அரிசி, தலா ஒரு பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், உப்பு, சிறிது கொத்தமல்லித்தழை, சிறிது புதினா சேர்த்து முக்கால் பதத்துக்கு வேக விட்டு வடித்து வைக்கவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி, மீதம் இருக்கும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் சேர்த்துப் பொரிந்ததும் வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாறியதும், தக்காளி, மீதம் இருக்கும் புதினா, கொத்தமல்லித்தழை, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள் மீதமிருக்கும் கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு, ஊறிய ஆட்டுக்கறி, உப்பு சேர்த்து 20 நிமிடங்களுக்கு குறைந்த தீயில் வதக்கவும். இனி, அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, மட்டன் உள்ள பாத்திரத்தை அதன் மேல் வைத்து வெந்த பாஸ்மதி அரிசியைத் தூவவும். இதன் மேலே குங்குமப்பூ ஊறிய பால், ஃப்ரைடு ஆனியன், ரோஸ் வாட்டர், கீரா வாட்டர், பொரித்த முந்திரி தூவி மூடி போட்டு, அதன் மேல் கனமான ஒரு பொருளைத் தூக்கி வைக்கவும். தீயை முற்றிலும் குறைத்து 20 நிமிடங்கள் `தம்’ போட்டு வேக விடவும். பிறகு, மூடியைத் திறந்து நெய்யை ஊற்றிக் கிளறிப் பரிமாறவும்.
தேவையானவை:
பாஸ்மதி அரிசி - 300 கிராம்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2
பச்சை மிளகாய் - 4 (ஸ்லைஸ்களாக வெட்டவும்)
வெங்காயம் - 3
பெங்களூர் தக்காளி - 4
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
புதினா - அரை கைப்பிடி
கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி
எலுமிச்சைப்பழம் - 1
எண்ணெய் - 50 மில்லி
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
முந்திரி - 25 கிராம் (15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து விழுதாக அரைக்கவும்)
தயிர் - 25 மில்லி
நெய் - 50 மில்லி
உப்பு - தேவையான அளவு
முட்டை மசாலா தயாரிக்க:
வேக வைத்த முட்டை - 4
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
ஆம்சூர் பவுடர் - அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு
உப்பு - சிறிதளவு
செய்முறை:
வெங்காயத்தை அரை நிலா வடிவத்துக்கு நறுக்கி வைக்கவும். பாஸ்மதி அரிசியைத் தண்ணீர் ஊற்றி, 20 நிமிடம் ஊற வைய்க்கவும். அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றி, வேக வைத்த முட்டையைச் சேர்த்து வதக்கவும். முட்டை மசாலாவில் குறிப்பிட்டுள்ள மற்ற பொருள்களையும் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி, அடுப்பை அணைத்து இந்தக் கலவையை ஒரு பௌலில் தனியாக எடுத்து வைக்கவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கி வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கியதும், தக்காளி, புதினா, கொத்தமல்லித் தழையைச் சேர்த்து சுருங்க வதக்கவும். இதில் தயிர், எலுமிச்சை சாறு, முந்திரி பேஸ்ட், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கி, அரை லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். பாஸ்மதி அரிசியை வடிகட்டி, உப்பு சேர்த்து இதில் வேக விடவும். முக்கால் பதம் வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி, அடுப்பில் ஒரு தோசைக் கல்லை வைத்து அதன் மேல் இந்தப் பாத்திரத்தை வைக்கவும்.
தீயை முற்றிலும் குறைத்து மூடி போட்டு அதன் மேல் ஒரு கனமான பொருளைத் தூக்கி வைக்கவும். 20 நிமிடங்கள் கழித்து, மூடியைத் திறந்து நெய் ஊற்றிக் கிளறி மசாலா முட்டையை வைத்துப் பரிமாறவும்.
தேவையானவை:
பாஸ்மதி அரிசி - 300 கிராம்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2
சீரகம் - அரை டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
அன்னாசிப்பூ - 1
தயிர் - 200 மில்லி
காஷ்மீரி மிளகாய்த்தூள் - அரை டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
நெய் - 50 மில்லி
எண்ணெய் - 50 மில்லி
பச்சை மிளகாய் - 4 (இரண்டாக உடைக்கவும்)
புதினா - அரை கைப்பிடி
கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி
எலுமிச்சைப்பழம் - 1
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - 2 (அரை நிலா வடிவத்துக்கு வெட்டவும்)
தக்காளி - 4 (பொடியாக நறுக்கவும்)
சிறிய உருளைக்கிழங்கு (பேபி பொட்டேட்டோ) - 12 (வேக வைத்து தோல் நீக்கியது)
குங்குமப்பூ - சிறிதளவு (1 டேபிள்ஸ்பூன் பாலில் பத்து நிமிடம் ஊற வைக்கவும்)
Also Read: பீட்ரூட் சாலட் | பரங்கிக்காய் கூட்டு | ப. மிளகாய் சட்னி - வீக் எண்ட் ரெசிப்பிக்கள் #WeekendRecipes
செய்முறை:
பாஸ்மதி அரிசியைத் தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்கள் ஊற விடவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, சீரகம், பிரியாணி இலை சேர்த்து வதக்கவும். இத்துடன் வெங்காயம் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி நிறம் மாறியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். புதினா, கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச்சாறு, தயிர், உருளைக்கிழங்கு, காஷ்மீரி மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
ஊற வைத்து வடிகட்டிய அரிசியை இதில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு முக்கால் பதம் வேக விடவும். தண்ணீர் வற்றியதும் அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து அதன் மேல் இந்தப் பாத்திரத்தை வைக்கவும். தீயை முற்றிலும் குறைத்து குங்குமப்பூ ஊறிய பாலை ஊற்றி, மூடி போட்டு அதன் மேல் கனமான பொருளை வைத்து 20 நிமிடங்கள் வேக விடவும். பின்பு மூடியைத் திறந்து நெய் ஊற்றி இறக்கிப் பரிமாறவும்.
தேவையானவை:
பாஸ்மதி அரிசி - அரை கிலோ
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2
பிரியாணி இலை - 1
பெரிய வெங்காயம் - 3 (அரை நிலா வடிவம் போல நறுக்கவும்)
தக்காளி - 3 (பொடியாக நறுக்கவும்)
உப்பு - தேவையான அளவு
சீரகம் - அரை டீஸ்பூன்
அன்னாசிப்பூ - 2
கறுப்பு ஏலக்காய் - 2
காஷ்மீரி மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4 (நெய்யில் வதக்கி மிக்ஸியில் அரைக்கவும்)
கெட்டித் தயிர் - 200 மில்லி
இஞ்சி-பூண்டு விழுது - தலா 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 50 மில்லி
எண்ணெய் - 50 மில்லி
புதினா - ஒரு கைப்பிடி
கொத்தமல்லித்தழை - 2 கைப்பிடி
கேரட்- பெரியது 1
பீன்ஸ் - 30 கிராம்
உருளை - 1
காலிஃப்ளவர் - 30 கிராம்
பச்சைப் பட்டாணி - 30 கிராம்
கீரா வாட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
ரோஸ் வாட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைப்பழம் - 1
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை (ஒரு டேபிள்ஸ்பூன் பாலில் பத்து நிமிடம் ஊற வைக்கவும்)
அலங்கரிக்க:
ஃப்ரைடு ஆனியன் - 4 டேபிள்ஸ்பூன்
ஃப்ரைடு முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன்
திராட்சை (கிஸ்மிஸ்) பழம் - 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு
Also Read: நாவில் எச்சில் ஊறும் நாடன் சிக்கன், பொலிச்சது ஃபிஷ் - வீக் எண்ட் ரெசிப்பிக்கள் #WeekendRecipes
செய்முறை:
காய்கறிகளைக் கழுவி ஒரு இஞ்ச் நீளத்துக்கு நறுக்கி தனியாக வைக்கவும். அரிசியை 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி தலா ஒரு பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து, பிரியாணி இலை, அன்னாசிப்பூ, சீரகம் போட்டு பொரிந்ததும், வெங்காயம் சேர்க்கவும். இதில் இஞ்சி-பூண்டு, பச்சை மிளகாய் விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கியதும், தக்காளி, காஷ்மீரி மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டு வதக்கவும். புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து சுருள வதங்கியதும், நறுக்கிய காய்கறிகள், பச்சைப் பட்டாணி போட்டு மிதமான தீயில் வதக்கி இந்த மசாலாவை தனியே எடுத்து வைக்கவும்.
காய்கறிகள் பாதி வெந்ததும் தயிர், எலுமிச்சை, உப்பு சேர்த்து வதக்கவும்.
மற்றோர் அடுப்பில் பாத்திரத்தை வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதித்ததும், ஊற வைத்த அரிசியை வடிகட்டி சேர்த்து உப்பு, மீதம் இருக்கும் ஏலக்காய், பட்டை, கிராம்பு, சிறிது புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து முக்கால் பாகம் வேக விட்டு வடித்து வைக்கவும்.
இனி, ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ள மசாலாவை இரண்டு பகுதியாகப் பிரித்து எடுங்கள். ஒரு பாத்திரத்தில் ஒரு பங்கு மசாலா அதன் மேல் வெந்த பாஸ்மதி அரிசி, அதன் மேல் மசாலா, அதன் மேல் பாஸ்மதி அரிசி என்பது போல பரப்பி வைத்துக் கொள்ளவும். இதன் மேல் கீரா வாட்டர், ரோஸ் வாட்டர், குங்குமப்பூ ஊறிய பால், பாதி நெய் ஊற்றி மூடி போடவும்.
அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து தீயை முற்றிலும் குறைத்து அதன் மேல் பிரியாணி அரிசி பாத்திரத்தை வைத்து மூடி போடவும். மூடியின் மேல் கனமான பொருளை வைத்து, இருபது நிமிடங்கள் வேக விடவும். பிறகு, மூடியைத் திறந்து, மீதம் இருக்கும் நெய் ஊற்றி, லேயர் லேயராக பிரியாணியை எடுத்து, அலங்கரிக்கக் கொடுத்தப் பொருள்களை கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.
source https://www.vikatan.com/food/recipes/different-recipes-of-veg-and-non-veg-biryani-weekend-recipes
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக