கனிமொழி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!
ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து நேற்று ஆளுநர் மாளிகையை நோக்கி தி.மு.க எம்.பி கனிமொழி தலைமையில் தி.மு.க மகளிரணியினர் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்றனர். தடையை மீறி பேரணி சென்ற கனிமொழி உள்ளிட்ட மகளிரணியினர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் சட்ட விரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தொற்று நோய் பரவல் சட்டம் உட்பட 5 பிரிவின் கீழ் கனிமொழி உள்பட 191 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது!
வெள்ளை மாளிகை திரும்பினார் ட்ரம்ப்!
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மருத்துவமனையில் இருந்து வெள்ளை மாளிகை திரும்பினார். கடந்த 4 நாள்களாக வாஷிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்ட ட்ரம்ப் வெள்ளை மாளிகை திரும்பினார். சிகிச்சையில் இருக்கும் போது அவர் காரில் பயணம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அமெரிக்க தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிபர் ட்ரம்ப், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: ட்ரம்ப்: அப்போ `மாஸ்க் போட மாட்டேன்'; இப்போ `காரில் சுற்றுவேன்' - கொரோனா சிகிச்சையிலும் அடாவடி!
source https://www.vikatan.com/news/general-news/06-10-2020-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக