Ad

செவ்வாய், 27 அக்டோபர், 2020

``காப்பாத்துங்க!''... ஹோட்டலில் அலறி ஓடிய‌ சுசித்ரா... பிக்பாஸ் க்வாரன்டீனில் என்ன நடந்தது?!

விஜய் டிவி எதிர்பார்த்தபடியே சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது பிக்பாஸ் சீசன்- 4. ''ஆறு மாசமா மக்கள் எல்லாருமே பிக்பாஸ் வீட்டுக்குள்ள இருந்த மாதிரி தனிமையில்தான் இருக்காங்க. வேலை இல்ல, கையில் காசு இல்ல... பிக்பாஸை எங்க பார்க்கப் போறாங்க'' என்கிற பேச்சுகளே கேட்டன.

இன்னொருபுறம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடந்து கொண்டிருப்பது, பிக்பாஸ் பிக் அப் ஆகாததற்கு ஒரு காரணமெனச் சொல்லப்பட்டது.

ஏற்கெனவே ஐந்தாறு மாதங்கள் நிகழ்ச்சிகள் எதுவுமே இல்லாமல் இருந்ததால், எப்படியும் பிக் பாஸ்-4க்கு முந்தைய சீசன்களில் கிடைத்ததைக் காட்டிலும் அதிக வரவேற்பைப் பெற்று தீர்வது என முடிவெடுத்த சேனல் அதிரடியாக ஆங்கர் அர்ச்சனாவை வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே அனுப்பியது.

பிக்பாஸ் - நாள் 20

அதற்குள், சுரேஷ் சக்ரவர்த்தி, அறந்தாங்கி நிஷா, அனிதா சம்பத் ஆகியோரால் ஓரளவு கன்டென்ட் கிடைத்து வந்த நிலையில், முதல் எவிக்ஷனில் ரேகா வெளியேறினார்.

இந்நிலையில், அர்ச்சனாவுக்கு அடுத்தபடியாக பாடகி சுசித்ரா ஷோவுக்குள் செல்வதற்காக க்வாரன்டீன் சென்றார். சென்னை ராமாபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் அவருக்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. க்வாரன்டீன் முடியாத நிலையில், இரு தினங்களுக்கு முன், தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இருந்து நள்ளிரவில் சுசித்ரா கதறிக்கொண்டு வெளியில் ஓடிவந்தததாக, சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் நம்மிடம் சொன்னார்கள். என்னவென விசாரித்தோம்.

Also Read: அமலா - நாகார்ஜுனா காதலும், பிக்பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி கடந்து வந்த பாதையும்!

"முந்தாநாள் ராத்திரி பதினோரு மணிக்கு மேல இருக்கும். திடீரென சுசித்ரா தங்கியிருந்த ரூம்ல இருந்து ஒரே சத்தம். 'என்னைக் கொலை செய்ய வர்றாங்க, காப்பாத்துங்க'னு கத்திக்கிட்டே ரிசப்ஷனுக்கு ஓடி வந்தாங்க. 'யார், என்ன'னு விசாரிச்சா, யாரோ ரூம் கதவைத் தட்டினதா சொன்னாங்க" என்றார் சம்பவத்தை நேரில் பார்த்தவர்.

பிறகு ஹோட்டல் தரப்பிலிருந்து, ''இந்த ஹோட்டல் மிகவும் பாதுகாப்பானது; இங்க இதற்கு முன்பு இதுபோல யாருக்கும், எதுவும் நடந்ததே இல்லை" எனச் சொல்லப்பட்ட போதும், நம்ப மறுத்து அதிக நேரம் ரிசப்ஷனிலேயே இருந்தாராம் சுச்சி.

சுசித்ரா

இதனால் ஹோட்டல் தரப்பு சேனலுக்குத் தகவல் தெரிவிக்க‌, அங்கிருந்து சிலர் வந்து பேசிய பிறகே சமாதானமாகி நள்ளிரவுக்குப் பிறகு தனது அறைக்குத் திரும்பியிருக்கிறார் சுசித்ரா.

"சுசித்ரா ஏன் அந்த மாதிரி நடந்துக்கிட்டாங்கன்னு யாருக்கும் புரியலை" என்கிறார் அவரை நன்கு அறிந்த அவரது நண்பர் ஒருவர்.

சம்பவம் நடந்த மறுநாள் சுசித்ராவுக்குக் கவுன்சிலிங் தரப்பட்டதாகவும் ஹோட்டலிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுசித்ரா இன்று இரவு அல்லது நாளை (28/10/2020) ஷோவுக்குள் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுசித்ரா குறித்து இப்படியான தகவல்கள். சுச்சி விஷயத்தில் சேனலும் குழப்பத்தில் இருப்பதால் அடுத்து என்ன என்பது சஸ்பென்ஸாகவே இருக்கிறது.


source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/singer-suchithra-faced-issue-in-bigg-boss-hotel-quarantine

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக