மும்பை அருகில் உள்ள உல்லாஸ் நகரில் தன் மனைவியுடன் வசிப்பவர் சுமித். இவர்களுடன், சுமித்தின் 12 வயது சகோதரியும் வசித்து வந்தார். சமீபத்தில் சுமித் தனது சகோதரியின் ஆடையில் ரத்தக்கரை படிந்திருந்ததை பார்த்தார். உடனே எப்படி ரத்தக்கரை வந்தது என்று சுமித் தனது சகோதரியிடம் கேட்டார். ஆனால் அவரின் சகோதரியால் சரியாக விளக்கம் கொடுக்க முடியவில்லை. உடனே தனது சகோதரி யாருடனோ பாலியல் உறவு வைத்துக்கொண்டதால்தான் ரத்தக்கரை படிந்திருப்பதாக சுமித் சந்தேகம் கொண்டார். இதனால் கோபத்தில் சுமித் தனது சகோதரியின் வாயில் துணியை வைத்து அடைத்து, பின் உதைத்து உடம்பு முழுவதும் தீயால் சூடு வைத்திருக்கிறார். இதில் சிறுமி படுகாயம் அடைந்தார்.
பின்னர் அவர் அக்கம் பக்கம் உள்ளவர்களால், அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அச்சிறுமி இறந்து போனார். இது குறித்து போலீஸாருக்கு மருத்துவமனையில் இருந்து தகவல் கொடுத்தனர். போலீஸார் சுமித்திடம் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. சிறுமிக்கு முதல் முறையாக மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. அதனால், ஆடையில் ரத்தக்கரை ஏற்பட்டுள்ளது. ஆனால் சிறுமி அதனை சரியாக கவனிக்கவில்லை.
இது குறித்து சுமித் தனது சகோதரியிடம் கேட்டதற்கு அவரால் சரியாக பதிலளிக்க முடியவில்லை. இதனால் அச்சிறுமிக்கு யாருடனோ தொடர்பு இருப்பதாகவும், அந்த நபருடன் தாம்பத்திய உறவு வைத்துக்கொண்டதால்தான் ரத்தக்கரை படிந்திருப்பதாக கருதினார்.
எனவேதான் சுமித் தனது சகோதரியை வாயை பொத்தி தீவைத்து காயப்படுத்தியுள்ளார். இதையடுத்து சுமித் கைது செய்யப்பட்டார். இக்கொலையில் சுமித் மனைவிக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
source https://www.vikatan.com/crime/bleeding-on-clothes-brother-murders-minor-sister-on-suspicion
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக