Ad

திங்கள், 1 மே, 2023

சோஷியல் மீடியா மூலம் 34 பேரின் தற்கொலைகளைத் தடுத்த மும்பை சைபர் பிரிவு போலீஸ்; எப்படித் தெரியுமா?

இன்றைக்கு சோஷியல் மீடியாவின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும் அதை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துகொள்கின்றனர். சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டு சிலர் தற்கொலையும் செய்கின்றனர்.

அது போன்று சோஷியல் மீடியாவில் தங்களது துக்கத்தைப் பகிர்ந்துகொண்ட பிறகு தற்கொலை செய்துகொள்பவர்களை மும்பை சைபர் பிரிவு போலீஸார் தீவிரமாகக் கண்காணித்து, அதைத் தடுத்துவருகின்றனர். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் வரக்கூடிய தகவல்களை அந்த நிறுவனங்கள் உடனுக்குடன் மும்பை சைபர் பிரிவு போலீஸாருக்குப் பகிர்கின்றனர்.

இதற்காக சைபர் பிரிவு போலீஸார் வாட்ஸ்அப் குரூப் ஒன்றை வைத்திருக்கின்றனர். சந்தேகத்துக்கிடமான முறையில் தற்கொலை மனநிலையில், ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் யாராவது தேடினாலோ அல்லது தகவல்களைப் பகிர்ந்துகொண்டாலோ உடனே சம்பந்தப்பட்ட நிறுவனம் மும்பை சைபர் பிரிவுக்குச் சம்பந்தப்பட்ட நபரின் இ-மெயில், போன் நம்பர் போன்ற விவரங்களை அனுப்பிவைக்கும். அவர்களுடன் சோஷியல் மீடியாவில் போலீஸார் சாட்டிங் செய்து அவர்களின் தற்கொலை மனநிலையை மாற்றுகின்றனர்.

போன் நம்பர் இருந்தால் அந்த நம்பரில் தொடர்புகொண்டு கவுன்சிலிங் கொடுக்கின்றனர். இதற்காக மும்பை சைபர் பிரிவு போலீஸார் 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டிருக்கின்றனர். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமிடமிருந்து தகவல்களைப் பெறும் இன்ஸ்பெக்டர் பாட்டீல் இது குறித்து, ``சில நேரங்களில் அதிகாலை 3 மணிக்குக்கூட எங்களுக்குத் தகவல் வரும். இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் வரக்கூடிய பதிவுகளை அப்படியே எடுத்து எங்களுக்கு அனுப்புவார்கள். சம்பந்தப்பட்ட நபரின் போன் நம்பர் இருந்தால், உடனே அவரைத் தொடர்புகொண்டு பேசுவோம்.

போன் ஆஃப் ஆகியிருந்தால் அவரின் சோஷியல் மீடியா கணக்கை வைத்து அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்து ,அந்தத் தகவல்களை உள்ளூர் போலீஸாருக்கு அனுப்பிவைப்போம். எங்களுக்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் பற்றிய விவரம் மட்டுமல்லாது, நாடு முழுவதுமிருந்து இது போன்று தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்கள் பற்றிய விவரங்கள் வந்துகொண்டிருக்கும். இந்த ஆண்டில் மட்டும் அது போன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட 34 பேரின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறோம். மது பழக்கத்தால் அதிக அளவில் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படுகிறது.

சமூக வலைதளம்

ஒருவர் தன்னுடைய மனைவி, அவரின் காதலனுடன் வெளியேறிவிட்டார் என்று கவலை தெரிவித்திருந்தார். உடனே நாங்கள் அந்தப் பெண்ணின் குழந்தைகளின் வீடியோவை சோஷியல் மீடியாவில் வெளியிட்டோம். அதைப் பார்த்து அந்தப் பெண் திரும்ப வந்துவிட்டார். இதன் மூலம் அந்த நபரின் தற்கொலை முயற்சி தடுக்கப்பட்டது'' என்றார்.



source https://www.vikatan.com/crime/mumbai-cyber-police-have-stopped-34-people-from-committing-suicides-through-24-hour-online-monitoring

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக