சென்னை அயனாவரம் பகுதியில் 60 வயது மூதாட்டி குடியிருந்து வருகிறார். இவரின் கணவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்துவருகிறார். இந்தத் தம்பதியினருக்கு பிறந்த இரண்டு குழந்தைகளும் இன்று உயிரோடு இல்லை. அதனால் கிடைத்த வேலைகளைச் செய்து அந்த மூதாட்டி வாழ்ந்து வருகிறார். அதோடு தன்னுடைய கணவரையும் கவனித்து வருகிறார்.
மூதாட்டி தங்கியிருக்கும் வீடு சிறிய அறையை உடையது. அதனால், அந்த வீட்டில் கணவர் மட்டுமே படுத்துறங்க முடியும். இதன்காரணமாகத் தெரிந்தவர்கள் வீடுகளில் மூதாட்டி இரவில் தூங்குவார். வழக்கம்போல அவர் தூங்கிக்கொண்டிருந்தார். அதிகாலை நேரத்தில் கதவைத் திறந்துகொண்டு மர்ம மனிதர் ஒருவர் உள்ளே புகுந்துள்ளார். அங்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டிக்கு அந்த நபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அதனால், அதிர்ச்சியடைந்த அந்த மூதாட்டி சத்தம் போட்டுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர், மூதாட்டியை சரமாரியாகத் தாக்கியுள்ளார். பின்னர் மூதாட்டியின் வாயைக் கையால் மூடிய மர்ம நபர், பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். தனக்கு இந்த வயதில் நேர்ந்த கொடுமையால் மூதாட்டி கண்ணீர் வடித்தார். பிறகு உறவினர்களிடமும் தெரிந்தவர்களிடமும் கூறினார்.
Also Read: மாணவர்களுக்கு ஓவிய மாடலாக இருந்த மூதாட்டிக்கு பாலியல் தொல்லை! - பேராசிரியர் கைது
அதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், மூதாட்டிக்கு ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக அயனாவரம் காவல் நிலையத்தில் மூதாட்டி தரப்பில் புகாரளிக்க தயக்கம் காட்டிவருகின்றனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். சம்பந்தப்பட்ட மூதாட்டி தரப்பில் புகாரளிக்கப்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஆதரவற்ற மூதாட்டியிடம் அதிகாலை நேரத்தில் தவறாக நடந்தவர் யாரென்று விசாரணை நடந்து வருகிறது. அயனாவரத்தில் நடந்த இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/crime/chennai-elder-woman-sexually-abused
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக