இந்தியாவில் 14 லட்சத்தை கடந்த பாதிப்பு!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,35,453 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 49,931 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 708 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,771 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9,17,568 ஆகவும் உயர்ந்துள்ளது.
கொரோனா - உலக நிலவரம்!
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,64,18,867ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 1,00,47,304 ஆக அதிகரித்திருக்கிறது. 6,52,256 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 43,71,839 ஆக அதிகரித்திருக்கிறது. இதனால் 1,49,849 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
source https://www.vikatan.com/news/general-news/2772020-corona-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக