பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத், முதன் முறையாகத் தன் நடனத்தின் மூலம் திரையுலகத்தில் காலடி எடுத்து வைத்தார். பின்னர் அவருக்குத் தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து `காய் போ சே’ என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டின் வெள்ளித்திரையில் அறிமுகமானார். 2014-ம் ஆண்டு சுஷாந்த் நடித்த அமீர்கானின் பி.கே படத்தின் மூலம் கவனம் ஈர்க்கப்பட்டார். பின்னர் `தோனி அண்டோல்ட் ஸ்டோரி' படத்தில் நடித்ததின் மூலம் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானார் சுஷாந்த். இவர் வாழ்வில் சிச்சோரே, கேதார்நாத் ஆகிய படங்கள் மிக முக்கியமானவை.
திரைத்துறையில் வளர்ந்து வரும் நடிகராக இருந்த சுஷாந்துக்கு அவரது சொந்த வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடுமையான மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் வீட்டிலிருந்த சுஷாந்த் கடந்த ஜூன் 14-ம் தேதி மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தன் வீட்டு அறையில் தற்கொலை செய்து கொண்டார். இவரது இறப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
Also Read: `கடும் மனஅழுத்தம்; கைகொடுக்காத சிகிச்சை?!’ - 34 வயதில் விபரீத முடிவெடுத்த நடிகர் சுஷாந்த் சிங்
இந்நிலையில் நேற்று சுஷாந்தின் ஒரு மாத நினைவு நாளில் சுஷாந்துடனான தன் நினைவுகளை மிகவும் உருக்கமாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்டுள்ளார் அவரின் தோழி ரியா சக்ரபர்த்தி. அதில், ``என் உணர்ச்சிகளை எதிர்கொள்ள இன்னும் சிரமப்படுகிறேன். காதல் மீது எனக்கு நம்பிக்கை வந்ததும் அதன் சக்தியைப் புரிந்துகொண்டதும் உன்னால்தான். எளிமையான கணக்குகூட வாழ்வின் அர்த்தத்தைப் புரிய வைக்கும் என்பதை நீதான் எனக்கு கற்றுக்கொடுத்தாய். அதை உன்னிடமிருந்து தினமும் நான் கற்றுக்கொள்வேன் என உனக்கு உறுதியளித்திருந்தேன்.
நீ இப்போது மிகவும் அமைதியான இடத்தில் இருப்பாய் என்பது எனக்குத் தெரியும். பால்வெளிகளும் நிலவும் நட்சத்திரங்களும் ஒரு சிறந்த இயற்பியலாளரை வரவேற்றிருக்கும். அன்பும் மகிழ்ச்சியும் கொண்ட நீ பல நட்சத்திரங்களை ஒளிரச் செய்வாய். எனது வால் நட்சத்திரமான உனக்காக நான் காத்திருக்கிறேன். அதன் மூலம் உன்னை மீண்டும் என்னிடம் அழைத்து வர விரும்புகிறேன். உலகம் கண்ட அதிசயம் நீ, ஒரு அழகான மனிதருக்கான எடுத்துக்காட்டாக நீ இருந்தாய். வெறும் வார்த்தைகளால் நம்மிடம் இருந்த அன்பை வெளிப்படுத்த முடியாது. அது நம் இருவருக்கும் அப்பாற்பட்டது என நீ சொன்னபோது உண்மையிலேயே அதை அர்த்தப்படுத்தினாய் என நினைக்கிறேன்.
Also Read: DilBechara Trailer: `அவெஞ்சர்ஸை தோற்கடித்த தில் பெச்சாரா!’ - சாதனை படைத்த சுஷாந்த் சிங் படம்
நீ எல்லாவற்றையும் மிகவும் திறந்த மனதுடன் நேசித்தாய், இப்போது நம் காதல் உண்மையில் அதிவேகமானது என்பதை நீ் எனக்குக் காட்டியிருக்கிறாய். உன்னை இழந்து 30 நாள்கள் ஆகின்றன. ஆனால், உன்னை நேசிக்க இந்த வாழ்நாள் முழுவதும் இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். ஒரு மாத மௌனத்துக்குப் பிறகு ரியா வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
source https://cinema.vikatan.com/bollywood/you-are-in-a-much-more-peaceful-place-now-rhea-about-sushant
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக