Ad

புதன், 22 ஜூலை, 2020

`மதத் துவேஷமும் கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்!' - நடிகர் ரஜினி #NowAtVikatan

`மதத் துவேஷமும் கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்!' - ரஜினிகாந்த்

கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததற்காகத் தமிழக அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ரஜினி

இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ரஜினிகாந்த், ``கந்தசஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காகத் தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். இனிமேலாவது மதத் துவேசமும் கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்... ஒழியணும்.

எல்லா மதமும் சம்மதமே! கந்தனுக்கு அரோகரா!’’ என்று பதிவிட்டிருக்கிறார்.

Also Read: `ரஜினி முடிவை யாரால் மாற்ற முடியும்?!' - அமைச்சர் கருத்தின் பின்னணி



source https://www.vikatan.com/news/general-news/22-07-2020-just-in-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக