கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து!
கல்லூரி இறுதியாண்டு பருவத் தேர்வுகள் தவிர மற்ற பருவத் தேர்வுகளை ரத்து செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருக்கிறார்.
கொரோனா முழு ஊரடங்கால் தமிழகத்தில் ஏற்கெனவே 10-ம் வகுப்புத் தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டிருந்தன. அதேபோல், சி.பி.எஸ்.இ தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்தநிலையில், பொறியியல் மற்றும் கலை அறிவியல் பிரிவு கல்லூரி மாணவர்களுக்கான இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர மற்ற செமஸ்டர் தேர்வுகளில் இருந்து மாணவர்களுக்கு விலக்கு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
Also Read: `கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம்!’ - மத்திய அரசு அறிவிப்பு
இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் செப்டம்பரில் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.
source https://www.vikatan.com/news/general-news/23-07-2020-just-in-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக