ராஜபாளையம் எம்.எல்.ஏ தங்கப்பாண்டியனுக்கு கொரோனா!
ராஜபாளையம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ தங்கபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது மனைவி, மகன் ஆகியோர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நிலையில், தற்போது அவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து, தமிழகத்தில் அமைச்சர்கள் உள்பட கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்திருக்கிறது.
இந்தியாவில் 12 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,92,915 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 37,724 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 648 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 28,732ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,53,050 ஆகவும் உயர்ந்துள்ளது.
Also Read: கொரோனா: `எப்போதும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்!’ - விளக்கும் சி.எஸ்.ஐ.ஆர் தலைமை அதிகாரி
கொரோனா - உலக நிலவரம்!
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒன்றரைக் கோடியைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2.39 லட்சம் பேருக்கு மேல் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் 40 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் 67,000 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.
Also Read: ரோட்டில் குவிந்த கொரோனா நோயாளிகள்; பதறிய சுகாதாரத் துறையினர்! - ஊட்டி சர்ச்சை
source https://www.vikatan.com/news/general-news/22-07-2020-corona-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக