அஞ்சறைப் பெட்டி பொருள்கள் தொடங்கி நாம் அன்றாடம் பயன்படுத்தும் எல்லாப் பொருள்களிலுமே வியாபித்துவிட்டது கலப்படம். கலப்படத்தில் இரண்டு வகை உண்டு. பொருளாதார லாபத்துக்காகத் தெரிந்தே செய்வது... தற்செயலாக நடைபெறுவது. தற்செயலாக நடைபெறுவது பெரும்பாலும் வீட்டில்தான். அம்மாவோ, மனைவியோ அஞ்சறைப் பெட்டியில் வைத்திருக்கும் கடுகுடன், சீரகம் கலந்துவிடுவதைப் போன்று. அதில் ஆபத்து இல்லை. ஆனால் லாப நோக்குக்காக அத்தியாவசியப் பொருள்களிலும், அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருள்களிலும் கலப்படம் செய்வதால் உடல்நலம் நிச்சயம் பாதிக்கப்படும்.
source https://www.vikatan.com/health/food/methods-to-detect-common-adulterants-in-milk-and-honey
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக