Ad

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

`குடும்பத்தினருடன் பிரச்னை; பாலியல் வன்கொடுமை!’- உ.பியை அதிரவைத்த 13 வயது சிறுமி கொலை

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தின் பகாரியா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அந்த கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியைக் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் முதல் காணவில்லை என போலீஸில் அவரது தந்தை புகாரளித்திருக்கிறார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், அவரது உடல் அருகிலுள்ள கரும்புத் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Representational Image

சிறுமியின் கண் மற்றும் நாக்கு ஆகிய பகுதிகளில் காயங்கள் இருந்ததால், கொல்லப்படுவதற்கு முன் அவர் சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் முடிவுக்கு வந்தனர். சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் கரும்புத் தோட்டத்தின் உரிமையாளர் சந்தோஷ் யாதவ் மற்றும் சஞ்சய் கௌதம் ஆகிய இருவர் மீது இஷாநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில், தோட்டத்தில் மலம் கழித்தது தொடர்பாக சிறுமியின் குடும்பத்தினருக்கும் கரும்புத் தோட்ட உரிமையாளர் சஞ்சய் குமாருக்கும் ஏற்கெனவே பிரச்னை இருந்தது தெரியவந்திருக்கிறது.

அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்துள்ள நிலையில், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், சிறுமியை சஞ்சயுடன் இணைந்து கொலை செய்ததை சந்தோஷ் யாதவ் ஒப்புக்கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த அந்த சிறுமியின் கண்கள், தோண்டி எடுக்கப்பட்டதாகவும் நாக்கு அறுக்கப்பட்டதாகவும் அவரது தந்தை குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், இதை போலீஸார் மறுத்துள்ளனர்.

போலீஸ் எஸ்.பி சத்யேந்திர குமார்

Also Read: மயிலாடுதுறை: வீட்டில் இருந்த சிறுமி; சிறார் வதை கொடுமை! - போக்ஸோ சட்டத்தில் வாலிபர் கைது

இதுகுறித்து பேசிய லக்கிம்பூர் கேரி மாவட்டக் காவல்துறை ஆணையர் சத்யேந்திர குமார், ``இஷா நகர் பகுதி கரும்புத் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கண்ணுக்கு அருகில் இருந்த காயம், தோட்டத்தில் இருந்த கரும்பின் கூர்மையான இலைகளால் ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது கண்கள் தோண்டியெடுக்கப்பட்டதாகக் கூறுவதில் உண்மையில்லை. இதுதொடர்பாக சந்தோஷ் யாதவ் மற்றும் சஞ்சய் கௌதம் என இரண்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளோம்’’ என்றார். இந்த சம்பவம் உ.பியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read: சென்னை அதிர்ச்சி: `யாருக்கு தில் அதிகம்?' - 23-வது மாடிச் சுவரில் சாகசம் செய்த சிறுமி!

இதுதொடர்பாக உ.பி யோகி ஆதித்யநாத் அரசைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் அம்மாநில முன்னாள் முதல்வர் மாயாவதி. ``முந்தைய சமாஜ்வாதிக் கட்சியின் ஆட்சிக்கும், இப்போதைய பா.ஜ.க ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இது வெட்கக்கேடான செயல்’’ என்று தெரிவித்துள்ளார். பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத், `பா.ஜ.க ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன’’ என்று குற்றம்சாட்டியுள்ளார்.



source https://www.vikatan.com/news/crime/13-year-old-girl-raped-and-murdered-in-uttarpradesh

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக