Ad

சனி, 17 ஜூலை, 2021

இந்திய மாநிலங்களின் வரலாறு: பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே பிரிக்கப்பட்ட மொழிவாரி மாநிலம்?!|பகுதி-3

இந்திய மாநிலங்களின் வரலாறு: வெடித்தது உண்ணாவிரதப் போராட்டம்! பிறந்தது மொழிவாரி மாநிலங்கள்|பகுதி -2 | இரண்டாம் பாகத்தை படிக்கக் கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்க...

Also Read: இந்திய மாநிலங்களின் வரலாறு: வெடித்தது உண்ணாவிரதப் போராட்டம்! பிறந்தது மொழிவாரி மாநிலங்கள்|பகுதி -2

``மொழிவாரி மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியாக, இந்தி திணிப்பை எதிர்த்து போராடி, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே முதல் மொழிவாரி மாநிலமாக உருவானது, ஒரிசா!"

1895-ம் ஆண்டு அப்போதைய மத்திய மாகாணத்தில் இருந்த சம்பல்பூர் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி, அரசு அலுவலகப் பணிகளில் இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டது. அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கையை எதிர்த்து ஒரியாவை தாய்மொழியாகக் கொண்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரிய மக்களின் தாய்மொழிப் பாதுகாப்பு போராட்டம் காலப்போக்கில் தனிமாநிலக் கோரிக்கை போராட்டமாக உருவெடுத்தது. இதனைத்தொடர்ந்து, பீகார், வங்கம் என பல்வேறு மாகாணங்களில் பிரிந்துகிடந்த ஒரிய மக்கள் ஒரணியில் ஒன்றுதிரண்டனர்.

உத்கல் கவுரப் மதுசூதன் தாஸ்

1902-ம் தனிமாநில கோரிக்கையை வலியுறுத்தி பாலசோர் மன்னர், ஆங்கிலேய அதிகாரி கர்சன் பிரபுவிடம் மனு கொடுத்தார். ஒரியாவின் தந்தை, ஒரியாவின் பெருமை (உத்கல் கவுரப்) என்றழைக்கப்படும் மதுசூதன் தாஸ் தனிமாநிலப் போராட்டத்திற்கு ஆதரவாக களத்தில் இறங்கினார். இதன் விளைவாக, 1903-ம் ஆண்டு "உத்கல் சம்மிலானி" என்ற அமைப்பைத் தொடங்கி, மயூர்மஞ்ச் மன்னர் ராமச்சந்திர பஞ்சதேவ் தலைமையில் கூட்டத்தை நடத்தினார்.

1912-ம் ஆண்டு வங்கத்திலிருந்து பிரிக்கப்பட்டு பீகார்-ஒரிசா மாகாணம் உருவாக்கப்பட்டது. தனிமாநிலத்தில் உறுதியாக இருந்த ஒரிய மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை. 1927-ம் ஆண்டு மொழிப்போராளி நீல கந்ததாஸ், சைமன் கமிஷனிடமும் மனு அளித்தார். தொடர்ந்து 1930-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில், பீகார்-ஒரிசா மாகாணம் சார்பில் கலந்துகொண்ட, பார்லகேமுண்டி மன்னர் கிருஷ்ண சந்திர கஜபதியும் தனிமாநிலக்கோரிக்கையை வலியுறுத்தினார்.

இப்படி மக்களின் தொடர்ச்சியான போராட்டத்தாலும், மன்னர்களின் முன்னெடுப்புகளாலும், 1931-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் "ஓடோனல் எல்லை வரையறை ஆணையத்தை”(O’Donnell Boundary Commission) அமைத்தது. ஒரிசாவுக்கென தனி வரைபடம் தயார் செய்யப்பட்டது.

ஒரிசா வரைபடம்

1935-ம் ஆண்டு இந்திய நிர்வாக சட்டத்தின்கீழ், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே ஒரிசா தனிமாநிலமாக பரிணமித்தது. 1936-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் நாள் இந்திய வரலாற்றிலேயே சுதந்திரத்துக்கு முன்பு உருவான முதல் மொழிவாரி மாநிலமாக "ஒரிசா” அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

1956-ம் ஆண்டு பிரிக்கப்பட்ட 14 மாநிலங்கள், 6 யூனியன் பிரதேசங்களோடு நின்றுவிடவில்லை மொழிவாரி மாநிலங்களின் உருவாக்கம். ஒரிசா, ஆந்திரா பற்றவைத்த நெருப்பு நாடுமுழுவதும் பல்வேறு மாகாணங்களுக்கும் தீயாய் பரவியது. அதனைத்தொடர்ந்து, இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் புதிதாகத் தோன்றின?

அடுத்த பாகத்தில்..!

இந்தியா: ஒன்றியம் முதல் கொங்குநாடு வரை! -தனிமாநில கோரிக்கைகளும், மாநிலங்கள் உருவான வரலாறும் - முதல் பாகத்தை படிக்கக் கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்க...

Also Read: இந்தியா: ஒன்றியம் முதல் கொங்குநாடு வரை! -தனிமாநில கோரிக்கைகளும், மாநிலங்கள் உருவான வரலாறும்|பாகம் 1



source https://www.vikatan.com/government-and-politics/politics/orissa-a-linguistic-state-divided-during-british-rule-history-of-indian-states

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக