`சசிகலாவுக்கு கொரோனா தொற்று குறைந்துள்ளது!’
சிறையில் இருந்த சசிகலாவுக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் சிகிச்சையில் இருக்கும் சசிகலா உடல் நிலை குறித்து பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் மருத்துவ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ``சசிகலா உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு கொரோனா தொற்று குறைந்துள்ளது. சர்க்கரை அளவு அதிகரித்துள்ளதால் இன்சுலின் மருந்து செலுத்தப்படுகிறது. தற்போது அவரால் சிரமமின்றி அமர முடிகிறது” எனக் குறிப்பிடபட்டுள்ளது. சசிகலா உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/news/general-news/25-01-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக