Ad

வியாழன், 10 டிசம்பர், 2020

கரூர்: `மகள்களின் படிப்புக்குப் பணம் புரட்ட முடியவில்லை' - விபரீத முடிவெடுத்த தந்தை

இரட்டையர்களான, இரண்டு மகள்களின் கல்லூரிப் படிப்புக்கு பணம் புரட்ட முடியாமல் தவித்த கரூரைச் சேர்ந்த ஒருவர், உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீவைத்து, தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read: கரூர்: காட்டன் நிறுவனத்தில் திடீர் தீ! - ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்

கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் அருணாசலம் நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன். ஓட்டுநரான இவருக்கு, சுதா என்ற மனைவியும், ஹரிணி (17), ஹரிவர்ஷனி (17) என இரட்டையர் மகள்களும் உள்ளனர். ஒரு காரை வைத்து டிராவல்ஸ் நடத்தி வந்திருக்கிறார். பெரிதாக வருமானம் இல்லாமல் இருந்த இந்தத் தொழிலில், கொரோனா பிரச்னைக்கு பிறகு, வருமானம் தடைபட்டிருக்கிறது. இதனால், அன்றாட வாழ்க்கையை கடத்துவதற்கே வருமானமின்றி சிரமப்பட்டிருக்கிறார்.

அக்கம்பக்கதில் கடன் வாங்கி காலத்தை ஓட்டி வந்திருக்கிறார். இந்த நிலையில், அவரது இரண்டு மகள்களும் பன்னிரெண்டாம் வகுப்பு வரை முடித்துள்ள நிலையில், ஈரோட்டில் உள்ள கல்லூரியில் மேல்படிப்புக்காகச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக வருவாய் இழந்து, சிரமப்பட்டு வந்த பாஸ்கரன், தனது மகள்களின் மேல்படிப்புக்கு பணம் தயார் செய்ய முடியாமல் தடுமாறி வந்துள்ளார். தனது உறவினர்களிடம் பணம் கேட்டும், வட்டிக்கு பணம் கேட்டும் அவருக்கு தேவையான தொகை கிடைக்கவில்லை.

தான்தோன்றிமலை

'வைத்திருக்கும் ஒரு டிராவல்ஸ் வாகனத்தையும் விற்று விடலாம்' என பாஸ்கரன் முடிவுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது ஆனால், அந்த வாகனத்தை விற்க எஃப்.சி மற்றும் இன்சூரன்ஸ் கட்ட முடியாத நிலையில் அவர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த பாஸ்கரன் நேற்று இரவு கடிதம் எழுதி வைத்துவிட்டு கருர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அங்குள்ள மக்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற தான்தோன்றிமலை போலீஸார், பாஸ்கரனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/karur-man-commits-suicide-over-financial-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக