Ad

வியாழன், 6 ஜனவரி, 2022

Tamil News Today: செங்கல்பட்டு இரட்டைக்கொலை... 2 பேர் என்கவுன்டர்! - நாட்டு வெடிகுண்டுகளை வீசி தப்ப முயன்றதாக தகவல்

செங்கல்பட்டு இரட்டைக்கொலையில் தொடர்புடைய 2 பேர் என்கவுன்ட்டர்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று அடுத்தடுத்து இருவேறு இடங்களில் இரட்டை கொலை சம்பவம் நடந்ததால் செங்கல்பட்டு நகரமே பெரும் பரபரப்படைந்தது. இந்த நிலையில் செங்கல்பட்டு இரட்டை கொலையில் தொடர்புடைய இருவர் காவல்துறையினரின் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரெளடிகள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

என்கவுன்ட்டர்

காவல்துறையினர் பிடிக்க முயன்றபோது தினேஷ், மொய்தீன் ஆகியோர் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. என்கவுண்டரில் பலியான தினேஷ், மொய்தீன் ஆகியோர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரெளடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க வெள்ளத்துரைக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்ட நிலையில், இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-07-01-2022-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக