Ad

சனி, 4 செப்டம்பர், 2021

நாமக்கல்: போர்டில் ஸ்பா மசாஜ்; உள்ளே பாலியல் தொழில்! - அதிரடி காட்டிய போலீஸார்

நாமக்கல்லில் ஸ்பா மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்ததாக, ஆறு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அங்கு பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்ட 6 பெண்களையும் மீட்டு, காப்பகத்துக்கு காவலர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

Also Read: மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: பேராசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை!

நாமக்கல் நகரில் சேலம் சாலையில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. அப்படி வந்த தகவலின் அடிப்படையில், அங்கு சோதனை மேற்கொள்ளும்படி அவர் நாமக்கல் போலீஸாருக்கு உத்தரவிட்டிருக்கிறார். அவரின் உத்தரவை தொடர்ந்து, நேற்று இரவு நாமக்கல் நகர காவல் ஆய்வாளர் வேலுத்தேவன் தலைமையிலான போலீஸார், சேலம் சாலையில் உள்ள பிரபலமான செல்போன் விற்பனையகத்தின் 2-வது மாடியில் உள்ள 'ட்ரீம் ஸ்பா' என்ற அந்த மசாஜ் சென்டரில் சோதனையிட்டனர். அப்போது, வெளியே போர்டில் ஸ்பா மசாஜ் சென்டர் என்று எழுதிவைத்துவிட்டு, உள்ளே பாலியல் தொழில் நடைபெறுவதை கண்டறிந்தனர். அங்கிருந்த 6 இளைஞர்களும், 6 பெண்களும் பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது. இதனால், 6 ஆண்கள், 6 பெண்கள் என 12 பேரையும் நாமக்கல் காவல் நிலையம் அழைத்து வந்த போலீஸார், அவர்களிடம் தீவிர விசாரனை மேற்கொண்டனர்.

நாமக்கல்

அதில், நாமக்கல் மாவட்டம், செல்லப்பம்பட்டியை சேர்ந்த ராம்பிரகாஷ், கேரளாவை சேர்ந்த சில்பி ஜான், பரமத்தி, சேலத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் என மொத்தம் 6 பேர், பெண்களை வைத்து, மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து, அந்த 6 இளைஞர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்த நாமக்கல் போலீஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மேலும், 6 பெண்களையும் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். அதோடு, இந்த மசாஜ் சென்டரின் முக்கிய பங்குதாரர் உள்ளிட்ட சிலரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளைஞர்கள் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்துள்ள சம்பவம், நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read: பாலிடிக்ஸ்! பாலியல் பாதுகாப்பு? தொடரும் அவலம்



source https://www.vikatan.com/news/crime/6-youths-arrest-by-namakkal-police-in-illegal-business

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக