இன்று முதல் திரையரங்குகள் இயங்கும்..!
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள, அதனை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து, அதாவது செப்டம்பர் 6-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
அதன் படி நான்கு மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று திரையரங்குகள் தூய்மை படுத்தும் பணிகள் நடைபெற்றது.
மேலும் பூங்காக்கள், அங்கன்வாடி மையங்கள், விளையாட்டு பயிற்சிக்கு மட்டும் நீச்சல் குளங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் பார்கள் போன்றவையும் இன்று முதல் மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-23-08-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக