Ad

ஞாயிறு, 18 ஜூலை, 2021

86 நாட்களில் 10,000 பேர் மரணம்! - கேரளத்தில் தொடரும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு

இந்தியாவில் முதன்முதலில் கொரோனா பாதித்தது கேரள மாநிலத்தில்தான். கேரள மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை இன்னும் முடிவடையவில்லை. 16.07.2021 அன்று மட்டும் கேரளத்தில் 13,750 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 10,697 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுவந்துள்ளனர். மொத்தம் 1,21,944 பேர் சிகிச்சையில் உள்ளனர். 29,93,242 பேர் கொரோனா பாதித்து குணமடைந்துள்ளனர். 3,72,317 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர். கேரளத்தில் லாக்டெளனில் குறைந்த அளவு தளர்வுகளே ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில் கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ் கேரளத்தை அச்சுறுத்திவருகிறது. தமிழக எல்லையான பாறசாலைப் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் பிறகு தனியார் மருத்துவமனை ஊழியர்களுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. நேற்று கூடுதலாக இரண்டு பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தை ஜிகா வைரஸ் அதிகமாக பாதித்துள்ளது. இதுவரை 30 பேர் ஜிகா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அவர்களில் 20 பேர் குணமடைந்துள்ளனர். தற்சமயம் 10 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஜிகா வைரஸ்

இந்தநிலையில், கொரோனா இரண்டாம் அலையில் 87 நாள்களில் 10,000 பேர் இறந்திருப்பதாக கேரள சுகாதாரத்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா இரண்டாம் அலை ஏற்பட்ட கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி, கொரோனா மரணம் 4,407-ஆக இருந்தது. ஏப்ரல் 21-ம் தேதி மரண எண்ணிக்கை 5,000-ஐ கடந்தது. ஜூன் 7-ம் தேதி மரண எண்ணிக்கை 10,000-ஐ எட்டியது. அதாவது 47 நாள்களில் 5,000 பேர் மரணம் அடைந்துள்ளனர். அடுத்த 38 நாள்களில் மரண எண்ணிக்கை 15,000 ஆனது. 85 நாள்களில் கொரோனாவால் 10,000 பேர் இறந்திருப்பதாக சுகாதாரத்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூன் மாதத்தில் ஒவ்வொரு நாளும் மரண எண்ணிக்கை 200-க்கும் அதிகமாக இருந்தது. கொரோனா இரண்டாம் அலையில் இதுவரை 15,115 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா இரண்டாம் அலையில் இறந்தவர்களில் 70 சதவிகிதம்பேர் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள். மரணித்தவர்களில் 20 சதவிகிதம் பேர் 41 வயது முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள். கொரோனா இரண்டாம் அலையில் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் 23 பேர் மரணமடைந்துள்ளனர்.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்

2020-ம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பாதிப்பில் எர்ணாகுளம் மாவட்டத்தில் அதிக மரணம் ஏற்பட்டது. கொரோனா இரண்டாம் அலையில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அதிக மரணம் ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் 3,000-க்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக திருச்சூர் மாவட்டத்தில் 1,600-க்கும் அதிகமான மரணம் ஏற்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் 1,000-க்கும் குறைவான மரணங்களே நிகழ்ந்துள்ளன. மாநிலத்தில் மற்ற மாவட்டங்களைவிட இடுக்கி மாவட்டத்தில் மரண எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

Also Read: கேரளா: கொரோனாவைத் தொடர்ந்து மிரட்டும் ஜிகா வைரஸ்! - தமிழக எல்லையில் கர்ப்பிணி உட்பட 14 பேர் பாதிப்பு

இந்தநிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கேரள மாநில சுகாதாரத்துறை கடந்த 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கோவிட் பரிசோதனை யக்ஞம் நடத்தியுள்ளது. அதில் சுமார் 3.75 லட்சம் பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. மேலும் மூன்று பேரில் ஒருவருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.



source https://www.vikatan.com/news/india/kerala-still-suffering-from-corona-second-wave

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக