வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கின் `ப்ளூ டிக்’ நீக்கம்!
குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கின் `ப்ளூ டிக்’ நீக்கம். அதிகாரப்பூர்வ கணக்கை உறுதிப்படுத்தும் ப்ளூ டிக்கை நீக்கியுள்ளது ட்விட்டர் நிறுவனம்!
சென்னையில் எடப்பாடி பழனிசாமி - ஓ. பன்னீர் செல்வம் சந்திப்பு!
தமிழக எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், எடப்பாடி பழனிசாமிக்கும், கட்சியின் ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வத்துக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்ததாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை ராயப்பேட்டை அலுவலகத்தில், சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். எனினும் இந்த கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வம் கலந்துகொள்ளவில்லை. கட்சி நிர்வாகிகளின் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கலந்து கொள்ளாத நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டம் அதிக கவனம் பெற்றது.
Also Read: ஓ.பி.எஸ் பங்கேற்காத கூட்டம்.. `குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா ஆடியோ!’ - எடப்பாடி பழனிசாமி சொல்வதென்ன?
நேற்றைய கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொள்ளாதது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ``அவர் இன்று(நேற்று) புது வீடு கிரகப்பிரவேசம் காரணமாக கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. இதில் வேறொன்றும் இல்லை. அனைத்து நிர்வாகிகள் கலந்து கொள்ளும் கூட்டம் இன்று நடைபெறவில்லை” என்றார். மேலும் தனக்கும் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்துக்கும் கருத்து வேறுபாடு என்பதில் உண்மையில்லை என்றார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி, இன்று ஓ. பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
source https://www.vikatan.com/news/general-news/05-06-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக